அன்றில் இருந்து
என் மன புத்தகத்தில்
ஐம்புலன்கள் உதவியில்
எண்ண பேனா கொண்டு
நான் கிறுக்கியவையெல்லாம்
இன்று என் குணங்களாக
எனக்குள் என்னோடு
போராட்டம் நடத்துகின்றன
நான் கிறுக்கியவை
என் பெற்றவர்கள்
சமூகத்தவர்கள்
என் சூழல்
எனக்குள் திணித்தவையை
சாடியே இருந்தது
அன்று நானறியாமல்
எனக்குள்
விதைத்ததை
இன்று அறிந்தும்
அறுவடை செய்யாமல்
தவிர்க்க முடியவில்லை
அன்று தெரியாமல்
திண்ற உப்புக்காக
இன்றும் தண்ணீர்
குடித்துகொண்டிருக்கிறேன்
மனம்
பழகி போனால்
குணம்
சிற்பி கையில்
இருக்கும் களிமண்
வடிவம் பெறுவது
அவனின் சிந்தனையை பொறுத்ததே
அக்கிரகாரத்து குழந்தை
மாமிசம் கண்டு குமட்டுகிறது
தாய்லாந்து குழந்தை
கரப்பான் பூச்சியை புசிக்கிறது
குழந்தையின்
மனம்
அவர்கள் வளரும்
சூழலை பொறுத்ததே!!!
வளரும் குழந்தைகளுக்கு நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுப்போம்!!!
/// குழந்தையின்
ReplyDeleteமனம்
அவர்கள் வளரும்
சூழலை பொறுத்ததே!!! ///
100% உண்மை...
பொறுப்பு பெற்றோர்கள்...
நன்றி நண்பரே..
Deleteபிள்ளையின் மனமோ பால் போலே
ReplyDeleteசூழல் தந்திடும் செயலே விஷமாகும்
சிந்தனைக்குரிய செயல்காட்டிச்
சிறப்பாய்ச் சொன்னீர் பாட்டினிலே...
அருமை... வாழ்த்துக்கள்!
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
Delete