கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

என் வாழ்கையை என்னை வாழவிடு.

உன் விவேகத்தை புகுத்தாதே என் வேகத்தை கூட்டவிடு மதங்களை திணிக்காதே மனிதத்தை உணர விடு கலாச்சாரத்தை காக்க சொல்லாதே இளமையை உணரவிடு

ஒரு மிருகம் உயிருடன் இருக்கும்போது அதன் இறைச்சியை உண்ணும் மனிதர்கள் (காணொளி)

மாமிச பிரியர்களே, சைவ சமய அன்பர்களே,ஐயர்மார்களே உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி உயிரே கொல்லாமல் அந்தந்த மிருகங்களின் இறைச்சிகளை உண்ணும் பாக்கியம் இன்றைய விஞ்ஞானத்தால் சாத்தியமாகி இருக்கிறது.

TENGLISH KISS கொடுத்து குழந்தை பாக்கியம் (KISS சாமியார்)

தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார்.

யார் துரோகி? ஈழமும் தமிழர்களும். ...!!!

மறுவாழ்வு கிடைத்துவந்த போராளிகள் வாழ்க்கை வீதியில் நிக்குது எப்படி இவர்கள் தப்பி வந்தனர் என எட்டப்பன் பட்டம் கட்டுது கூடவே பல கட்டுகதை கட்டுது மொத்தத்தில் இவர்களை ஒதுக்கியே வைக்குது அன்றைய போராளிகள் இன்றைய துரோகிகள் என்கிறது

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

தாய் மொழி அம்மா!



அம்மா!
ஆயிரம் ஆண்டுகள் பல கடந்த மொழியாம்
தரணியில் இதுதான் முதல் மொழியாம்
அன்னையே உன் அன்பை சொல்ல
தமிழில் வார்த்தை இல்லையே
ஏமாற்றியது செம்மொழி!
தாயே ​​உன் பாசத்தால் மொழியையும் வென்றாய்
அதனால் தான் தாய் மொழி என்றோம்!


-புலோலியூர் கரன்-
http://www.facebook.com/sabaharans

அமுதசுரபி இறுதி முத்தம்




கார்மேக நதிக் குழல் நடுவே 

கரம் புதைத்து அருகசைத்து
செவ்வதனம் கயல்மூடி 
இதழ் பதிக்க நாணியவள் 
நாற்குணமும் பதைபதைக்க 
கலமனைத்தும் சிலுசிலுர்க 
காலமதன் கைகொடுக்க
குணமனைத்தும் மறைந்திடவே
தையலவள் ஏங்கிநின்றால்
பருவமதை உணர்ந்திடவே
பக்குவமாய் அறிந்திடவே
பலகால ஏக்கங்களை
மெய்யிரண்டும் ஓருயிராக
காமனவன் தடம் பதிக்க
அவன்கொடுத்த இறுதி முத்தம்
அமுதசுரபி இனிமையல்லோ!!!

-புலோலியூர் கரன்-
http://www.facebook.com/sabaharans

உள்ளம் கேட்கிறது அந்த அழகிய நாட்களை


பட்டாம்பூச்சிகள் போல 
மனம் பல வண்ணங்களில் 
எங்கெங்கோ பறந்து திரிந்தது 
எந்த சுமையுமில்லை 
அறியும் பக்குவமுமில்லை
சுகந்திரகாலமது

வெயிலுக்கு பயந்ததுமில்லை
மழைக்கு ஒதுங்கியதுமில்லை
இயற்கையோடு சங்கமித்த
சந்தோஷ காலமது

இலந்தை,விளா முட்கள்
குத்தி வலித்ததுமிலை
மா, புளி புளித்ததுமில்லை
ஒரு மரத்தையும் விட்டதில்லை
எந்த சத்து குறையுமில்லை
ஆரோக்கியகாலமது

விளையாடாத விளையாட்டுமில்லை
விழுந்தெழும்பாத இடங்களுமில்லை
வியர்க்காத நாட்களே இல்லை
சோர்த்து திரிந்ததுமில்லை
துடிப்பான காலமது

உள்ளம் கெடக்குதே
அந்த அழகிய நாட்களை
நினைக்காத நாட்களே இல்லை
மீண்டும் இது கிடைபதாயுமில்லை
ஏக்க காலமிது !!!