கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

என் வாழ்கையை என்னை வாழவிடு.

உன் விவேகத்தை புகுத்தாதே என் வேகத்தை கூட்டவிடு மதங்களை திணிக்காதே மனிதத்தை உணர விடு கலாச்சாரத்தை காக்க சொல்லாதே இளமையை உணரவிடு

ஒரு மிருகம் உயிருடன் இருக்கும்போது அதன் இறைச்சியை உண்ணும் மனிதர்கள் (காணொளி)

மாமிச பிரியர்களே, சைவ சமய அன்பர்களே,ஐயர்மார்களே உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி உயிரே கொல்லாமல் அந்தந்த மிருகங்களின் இறைச்சிகளை உண்ணும் பாக்கியம் இன்றைய விஞ்ஞானத்தால் சாத்தியமாகி இருக்கிறது.

TENGLISH KISS கொடுத்து குழந்தை பாக்கியம் (KISS சாமியார்)

தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார்.

யார் துரோகி? ஈழமும் தமிழர்களும். ...!!!

மறுவாழ்வு கிடைத்துவந்த போராளிகள் வாழ்க்கை வீதியில் நிக்குது எப்படி இவர்கள் தப்பி வந்தனர் என எட்டப்பன் பட்டம் கட்டுது கூடவே பல கட்டுகதை கட்டுது மொத்தத்தில் இவர்களை ஒதுக்கியே வைக்குது அன்றைய போராளிகள் இன்றைய துரோகிகள் என்கிறது

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

இத்தனை அழகையும் மொத்தமாய் ஓரிடத்தில் !!!


மழைமேகம் நிலவதன்மேல் 

தவழ்ந்து விளையாடுவதுபோல் 
உன் நிலா முகத்தில் 
கார்குழல் வீழ்கிறதே 
உன் தங்க நிற அங்கத்தில் 
ஒட்டிய வைர மூக்குத்தியும் 
மங்கித்தான் போகிறது

உன் முகத்தின் அழகு கண்டு
வானவில்லும் வயிறெரிந்து
கருகித்தான் போனதுவே
கருகிய வானவில்லும்
உன் புருவம் ஆனதெப்போ

காந்தம் கொண்டு செய்த
கருநிலா இரு விழியும்
காளையர் மனங்களை
கவர்வதில் மாயமில்லை

உதட்டோரம் குவியும்
உன் புன்சிரிப்பில்
சிதறாமல் ஓரிதயம்
இருந்துவிட்டால் அது
இப்பாரினிலே அதிசயமே

தூக்கிய கையின்
பாவங்கள் கண்டேன்
பாரினை ஏனோ
மறந்தே போனேன்

உடை திமிரும்
உன் பருவங்களால்
எண்ணங்களும்
உருக்குலைந்து
கற்பனையில் பரவசமும்
காட்சிகளில் வந்ததுவே

குளத்தினில் மிதக்கிறது
பல வண்ண தாமரைகள்
என் மன கிணற்றில்
அலைகிறது
உன் இடையின்
நளினங்கள்

பிரம்மனே
இத்தனை அழகையும்
மொத்தமாய் ஓரிடத்தில்
குத்தகை கொடுத்தது
எப்படி நியாயம் !!!

இணையத்தில் கவியாகிவிட்டாய் ...!


கிளையோடு விளையாடி 

இலையோடு உறவாடி 
கனியோடு பசியாறி 
மனதோடு இதமாகி 
கணணியோடு  காட்சியாகி 
இணையத்தில் கவியாகிவிட்டாய் ...!

ஐ லவ் யூ அப்பா



ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.
வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்
பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீறல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

இலக்கை நிர்ணயி, திட்டமிடு ,உழை ,வெற்றி பெறு...! !



ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது.

அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். 
ஆனால்,அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

ந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது.
வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே!
மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்;
வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும்.
இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது.
இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.
ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து,ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.
இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு.
அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும்.
அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து,முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான்.
மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான்
''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா?
ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்;
அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்;
இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர்.
இன்று வீடு, வாசல், அரண்மனை,அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது.
இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை;
என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்!
சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்!
அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்!
உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.........................................





ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

(1) ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்;
அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

(2) அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல;
நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும் , திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

தட்டிவிடும் சாக்கில் என்கைகள் அவளை தொட்டுவிட ...!



ஈர காற்று மெல்ல வீசி வந்து 

அவள் இதழோடு உரசி செல்ல 
காற்று பட்டு மூடித் திறந்த கண்கள் 
என்னை அருகில் சொக்கி இழுக்க 
பொறாமை கொண்ட மணல்கள் 
கண்ணில் புகுந்து கலகம் செய்ய 
புத்தி கொண்ட சில மணல்கள்
அவள் அங்கம் ஒட்டி கொள்ள
அதை தட்டிவிடும் சாக்கில்
என்கைகள் அவளை தொட்டுவிட
வெட்கி தலை கவிழ்ந்து அவளும்
மெல்ல என் மடியில் ஒட்டிக்கொள்ள
கைகளை மெல்ல மாலைகளாக்கி
தன்னோடு இறுக்கிக்கொள்ள
போக வழியன்றி வீசி வந்த தென்றலும்
வெட்கி சென்று கடலிடம் முறையிட
நியாயம் கேட்க வந்த அலையும்
நம்மை பிரிக்க மனமின்றி
பலமுறை திரும்பி செல்ல
ஒன்றாய் கண்கள் மூடி கிடந்தோம்
படகின் இனிய நிழலிலே
பாரினை மறந்து மகிழ்ந்தோம்...!


-புலோலியூர் கரன்-
https://www.facebook.com/sabaharans

கருப்பை சிறையில் பத்து மாசம்...!


என் உயிர் வருத்தி 

உன் உயிர் கொடுக்க 
கருவறையில் சில மாசம் 
உன்னை நான் சுமந்தேன் 

என்னை உயிரோடு பிணமாக்கி 
எதற்கிந்த கல்லறை இல்லத்தில்
அனாதையாய் விட்டு சென்றாய்

உன்னை
பத்து மாதம் என் கருப்பையில்
சிறை வைத்ததாக நினைத்து
எனக்கு
இங்கு தினமும் மரண தண்டனையா...!!!

மார்பழகு கெட்டுவிடுமென


மார்பழகு கெட்டுவிடுமென 

மகனுக்கு மாப்பால் கொடுக்கும் 
மங்கையர் உலகினில் 
இவனுக்கு தாயிந்த பசு 
இனி வரும் காலம்தனில் 
முதியோர் இல்லங்கள் 
அடிகொன்று வந்தாலும் 
ஆச்சர்யமில்லை.......!

English Kiss கொடுத்து குழந்தை பாக்கியம் (Kiss சாமியார்)


கோவை மாதம்பட்டி குப்பனூரில் அற்புத சாமியார் அவதரித்திருக்கிறார் தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார். இந்துமதம் போல எங்காவது இப்படி அருள் வழங்க யாரும் இருக்கார்களா?

உயரத்தில் இருந்து குழந்தைகளை தூக்கி எறியும் மூட நம்பிக்கை (காணொளி)


ஐம்பதடி உயரத்தில் இருந்து குழந்தைகளை தூக்கி எறிந்து கீழே சிலர் நின்று பிடிக்கிறார்கள் இது குழந்தைக்கு நல்லதாம் எப்படி எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள்...........



.

ரஜினி நல்ல நடிகனா? தலைவனா?



தாய் மண்ணில் கோடிகளில் 

தொழிற்சாலைகள் 
உன் மகளுக்கு கோடிகளில் 
சீதனம் 
வங்கியில் மில்லியன் கோடிகள் 
பணமாக 
இத்தனை இருந்தும் இறப்பர் செருப்பில்
இந்தியர் மனதில் இடம் பிடிக்கும்
சூட்சுமம் எப்படி அறிந்தாய்
நிஜமாகவே நீ நடிகன்டா

இருப்பதை வாரி வழங்கிவிட்டு
இல்லாமல் இருப்பதை போல
இங்கு பெருமை பேசிக்கொள்ள
இதுபோன்ற புத்தகங்கள் இருக்கும்வரை
உன்னை தலைவன் என போற்றும்
உருப்படாத ரசிகர்கள் இருக்கும்வரை
நீதான் அடுத்த முதலமைச்சர்
கல்விக்கண் திறந்த காமராஜர் கூட |
உன் கருணைக்கு பின்தான்

அவர் உழைக்கிறாய்
கொடுப்பது கொடுக்காதது
அவர் விருப்பம் என்று
யாரோ என்னை ஏசும்
சத்தம் கேட்கிறது

இதுபோன்ற மக்களை வைத்து
போற்றி புகழ்ந்து அசாதாரணமாக
உழைப்பவன் கொடுக்க கூடாதென்றால்
திருடுபவன்தான் கொடுக்கனும்

ஐயாயிரம் சம்பளம்
பெறுபவன் கூட
ஐநூறு கொடுக்கிறான்
கோடிகளில் வாங்குபவன்
உயிரிலும் மேலான ரசிகர்கள்
என்று அடைமொழி சொல்பவன்
கொடுக்கும் விகிதம்தான் என்ன?

நடிகனை நடிகன் என்றால்
யாருக்கும் பிரச்சனை இல்லை
தலைவன் என்கிறீர்களே
அதனால் நாளை இதுபோன்ற
சுயநலவாதிகள் நாடாழ
ஆசை கொள்ளலாம் அதனால்
தோலுரிக்க வேண்டியுள்ளது
இந்த சுயநலவாதிகளை

உணவுக்கு வழியில்லாத
எத்தனையோ பேர்
உன்னை பார்த்து
புகைக்க பழகினர்
உன் உருவத்துக்கு ஏறி
பாலூத்தினர்
உனக்காக வேண்டி
மண் சோறு உண்டனர்
ஆயிரம் ஆன்மிகம் பேசும்
உனக்கு இதை தடுக்க ஏன்
வார்த்தை வரவில்லை
இவை தவறென்று உரைக்க
முடியவில்லை
இவர்கள் அன்பை பார்த்து
வியக்கிறேன் என்று
நாடகமாடினாய்
திரையில் மட்டுமல்ல
அதை விஞ்சிய நடிகன் நீ
நிஜத்தில்!!!!

மெல்லிடையோ இது கள்ளிடையோ!



உன்னில் நனைகிறது என் விழிகள் 

காந்தபார்வையில் இரும்பாகியே!

மதிவதனி உன் வதனம்கண்டு 
மறந்ததென் மதியும் முகமும்!

கன்னங்கள் சிந்தும் போதையில்
மதுக்கிண்ணங்கள் தோற்றதே!

குவியும் உன் செவ்வுதட்டில்
சிதறித்தான் போகிறேனே நான்!

திமிரும் உன் பருவங்கள் கண்டு
உருகுது என் இளமையும் மென்று!

மெல்லிடையோ இது கள்ளிடையோ
போதையில் ஆடி முறிந்து முளைக்குது!

நீ கன்னத்தில் வைத்த கையழகில்தான்
என் எண்ணத்தில் கவியும் வந்து வீழ்ந்ததோ!

உலகிற்கு அம்மா உழவன் என்பேன் !




பசி இல்லாததுபோல
பாசாங்கு செய்வாள்
பிள்ளையின் பசி போக்க
பட்டினியாய் கிடப்பாள்

கடவுள் இல்லை என்று
எப்போதும் நான் சொன்னதில்லை
அம்மா உன் கருணை கண்டதால்

தானும் தன் குடும்பமும்
வறுமையில் தவிக்க
பூமியை செழுமையாக்கி
உலகத்தவர்கள் யாவரும்
பசியாற உழைக்கும்
உழவனும் தாயும் ஒன்றே

எனக்கு இறைவன் அம்மா என்றால்
உலகிற்கு அம்மா உழவன் என்பேன்
உழவனே உன் தியாகம் உணர்ந்ததால்
உள்ளத்தில் இன்னமும் நன்றி உள்ளதால்!!!


-புலோலியூர் கரன்-
https://www.facebook.com/sabaharans

சூரியன் மேல் பழி போடாத குந்திகள்



நாகரீகம் இங்கே கூட கூட 

உடைகள் அங்கே குறைகின்றன 
புதிய உடையை கிழித்து அணியும் 
புதுமை புரட்சியும் நடக்கிறதங்கே 
இன்றைய கண்ணகிகள் போதைக்காக 
கற்பிழக்கும் கண்ணன் அழகிகளிவர்கள் 
கலியுக கர்ணன்களை உருவாக்கும்
செல்வந்த சுகபோக வாரிசிவர்கள்
சூரியன் மேல் பழி போடாத குந்திகள்
சுகம் தேடி அலையும் இந்திரலோகமிது

மாற்ற உடையின்றி ஒருசமூகமிங்கே
மழைக்கு ஒதுங்க இடமின்றி நனையுது
கிழிந்த உடையை தைத்து தைத்து உடுத்தி
கற்பு காக்கும் இவர்கள் தீண்டத்தகாதவரிங்கே
சுருங்கிய வயிற்றை தண்ணீர் விட்டு நிரப்பும்
சுந்தர மதன காம சுகபோகத்தவர் எச்சங்களிவர்கள்
ஒவ்வொரு நிமிடத்தையும் நரக யுகமாக கடக்கும்
கடவுள் குழந்தைகள் இவர்களும் மனிதர்கள்தான்!!!

பூசாரி!!!




கடவுளின் தூதுவன் நான் 
சாதியில் உயர்ந்தவன் 
என் அங்கங்கள் எல்லாம் 
அருள் பொழியும் தங்கங்கள்
என்னுடல் பட்டால் அடையலாம்
பூலோகத்தின் பிறவிப்பயன்..!!!

இவர் பாதத்தால் மிதிக்கும் போதே இத்தனை அருள் என்றால் இவர்...........


-புலோலியூர் கரன்-
https://www.facebook.com/sabaharans

நடமாடும் பிணமாக!!!



இறந்தது நீதான்
எடுத்து சென்றதோ 
என் உயிரைத்தான்
கல்லறையில் நீயோ
அமைதியான தூக்கத்தில்
அதன்மேல் நானோ
நடமாடும் பிணமாக!!!
-புலோலியூர் கரன்-

அரை நிர்வாணப் படத்தை தனது முகநூலில் வெளியிட்ட முஸ்லீம் பெண்ணுக்காக அரை நிர்வாண போராட்டம் (18+)


முஸ்லீம் பெண்ணுக்கு ஆதரவாக அரை நிர்வாண போராட்டம்


துனிசியா நாட்டில் வாழும் அமீனா என்ற 19 வயது பருவப் பெண், தனது அரை நிர்வாணப் படத்தை தனது முகநூலில் வெளியிட்டார். "எனது உடல் எனக்குரியது, யாரையும் மகிமைப் படுத்துவதற்கு அல்ல." என்று அரபி மொழி வாசகங்களை தனது மார்பில் எழுதி வைத்திருந்தார். அந்தப் படம் வெளியானவுடன், நாலாபக்கமும் இருந்து மதவாதிகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அமீனாவை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று சில இஸ்லாமிய மதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயமுறுத்தல்களால், அமீனா தலைமறைவாக வாழ்வதாகவும், அவரது பெற்றோர் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் பல வதந்திகள் பரவின. இதே நேரம், உக்ரைனிய அரை நிர்வாண போராளிகளான Femen அமைப்பினர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று, 4 ஏப்ரல், உலகம் முழுவதும் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தும் தினமாக அறிவித்துள்ளனர். அதன் ஒரு கட்டமாக, Femen அமைப்பை சேர்ந்த ஐந்து பெண்கள், இன்று பெல்ஜியத்தில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். புருசெல்ஸ் நகரில் உள்ள, பெரிய மசூதிக்கு முன்னால் நடந்த அரை நிர்வாணப் போராட்டம், எந்த வித அசம்பாவிதமும் இன்றி முடிவுக்கு வந்துள்ளது. இன்று வேறு பல ஐரோப்பிய நகரங்களிலும், இதே போன்ற போராட்டங்கள் நடந்துள்ளன. அமீனாவுக்கு ஆதரவாக, உலகம் முழுவதிலும் இருந்து பல பெண்கள், இணையத்தில் தமது படங்களை பதிவேற்றி வருகின்றனர். இணையத்தில் அமீனாவுக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டையும் நடக்கின்றது. இதே நேரம், Femen இணையத்தளம் தாக்குதலுக்குள்ளாகி முடக்கப் பட்டுள்ளது.
http://www.euronews.com/2013/04/04/femen-targets-islam-in-bare-breast-brussels-protest/


நிலா முகத்தில் இரு பிறைநிலா பேரழகு



தங்கங்கள் தான் மின்னுமே 

ஏனோ பெண்ணே உன் 
அங்கங்கள் மேலிருப்பதால் 
மங்கித்தான் போகின்றன 

உன்மேல் வானவில்லுக்கு 
என்ன இத்தனை உரிமை
சேலையாகி மானம் காக்கிறதே
மானம் காப்பதாக சொல்லி
உன் சோலை தழுவியே
என் கோவம் தூண்டுதே

பூக்கள் பூத்து குலுங்கும்
அழகிய நந்தவனத்தில்
உன்னையன்றி எதையும்
பார்க்க தோன்றவில்லையே

உன் நளினம் கண்டு மயங்கி
மயிலும் நடனம் கற்க வந்ததோ
உன்னசைவு கொண்டு அன்னமும்
நடை பயின்று சென்றதோ

வண்ணத்து பூச்சியொன்று
தேன் குடிக்க வாடி நிக்குதே
உன் பாதத்தை புது மலரென
மதி மயங்கியே

பூமிக்கு பிறைநிலா அழகு
உன் நிலா முகத்தில்
இரு பிறைநிலா இமைகள்
பேரழகு...!!!

-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

கடவுள் மலடாகட்டும்!!!




இறைவா!
யாருமற்ற அனாதைகள்
உன் குழந்தைகளாமே
தவம் ஒன்று செய்கிறேன்
நீயும் மலடாகி போக 
வரம் ஒன்று தருவாயா!!!
-புலோலியூர் கரன்-

அவள் நினைவுகளில்....!!!


கவலையில் இருந்தேன்
 
கனவுகள் இல்லை அவள்
நினைவுகளால் எனக்கு
தூக்கங்கள் இல்லை 

கண் மூடியும் விழித்திருந்தேன் 
தையலவள் கூந்தலிடை 
முகம்புதைத்த நினைவுகளில்

கண் விழித்திருந்தும் 
லயித்திருந்தேன் அவள் 
சுவாசம் தடவிய ஸ்பரிச 
பொழுதுகளை மீட்டியபடி

என்னை வணங்க வாசலில் சிலர்!!!


என் கஷ்டத்தை தீர்க்க 

கோவில் நோக்கிய பயணத்தில் 
பூசாரியின் அர்சனை சீட்டுக்கள் 
பிச்சைகாரர்களில் தட்டுக்கள் 
கடவுளின் உண்டியல்கள் 
என்னை நோக்கியே இருக்கின்றன
நான் கடவுளை வணங்கமுன்
என்னை வணங்க வாசலில் சிலர்!!!



-புலோலியூர் கரன்-

என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

15 பேரை உயிருடன் கொடூரமாக எரிக்கும் காணொளி

எச்சரிக்கை :இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நன்று.........

கென்யா நாட்டின் மேற்குப்பகுதியில் "கீசி" இன மக்கள் வாழும் பிராந்தியத்தில் 15 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சுமார் 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீடுகளில் சோதனை நடத்தி இந்த 15 பேரையும் வெளியே இழுத்தெடுத்து. அவர்களை சூனியக்காரிகள் என குற்றம் சுமத்தி தெருவில் பலர் முன்னிலையில் உயிரோடு கொளுத்தியது. கென்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த திகில்சம்பவம், அரசாங்கத்தை விரைந்து நடவடிக்கை எடுக்க தூண்டியது. கும்பல் வன்முறையில் ஈடுபட்ட சிலரை கைது செய்தது. கிறிஸ்தவ மதம் அதிகாரம்செலுத்திய மத்திய கால ஐரோப்பாவில் நிலவிய "சூனியக்காரிகள் எரிப்பு வன்முறை", இன்று ஆப்பிரிக்க கிறிஸ்தவர்களிடையே பரவி வருகின்றது. மதம் வளர்க்கும் மூட நம்பிக்கைகளின் தீய விளைவுகளில் ஒன்று இது. அதிர்ச்சிதரும் "சூனியக்காரிகள் எரிப்பு" வீடியோவை இங்கே இணைத்துள்ளேன்.

நன்றி கலையகம் .

உமாதேவி உடலில் இத்தனை அழுக்கா...!!!


உலகை காக்கும் உமையவள் 

உடல்தனில் அத்தனை அழுக்கா? 

உருட்டி உருவம் செய்து 
உயிர் கொடுக்கும் அற்புத 
அறிவியல் கடவுளர் உலகினில் 
பார்வதி குளிக்க காவலர் ஏனோ?

யாரிடமிருந்து காத்திட சொல்லி
குளித்திடும் இடமதில்
உயிர் கொடுத்த உருவத்தினை
வாசலின் காவல் வைத்தார்?

அவனன்றி அணுவுமசையாத
அற்புத சக்திவான் சிவன் கூட
தன் பிள்ளை இவனென
அறிந்திடா மாயமென்ன
பிள்ளை"யார்" என கேட்டது சரியா?

ஒழுக்கமில்லை எனக்கு....



உதயனின் கள்ள காதலால் 

பூமியை பிரிந்தவள் நான் 
என்பிரிவால் வறண்டது பூமி
காதல் பயனத்தினிடையில் 
முகிலவன் மோகத்தால் 
அவள் அணைப்பில் சிலநேரம்
உரசிடும் முகில்களின்
உக்கிர மோதலில் சிந்திய
உதிரமாய் பார்தனில்
வந்து மீண்டும் வீழ்ந்தேன்
துள்ளி குதித்து மகிழ்கிறேன்
மழைதுளியாக!!!
அடுத்த பயணத்திற்காக
நீர்த்துளியாக!!!