ஒளி நோக்கி உயர்ந்திடும் மரமே உன் வளைவுகள்உரைக்கிறது உணவுக்கான உன் உழைப்பை உன்னை பார்த்தேனும் நான் உணரவில்லையே உழைத்து உயர்ந்திடும் உண்மையை பட்டு கெட்டு அறிந்தபின் பார்த்து வியக்கிறேன் இயற்கையிடம் கற்க மறந்ததை!!! -புலோலியூர் கரன்-
நம்(பிக்)கையில்தான் ...!!!
இந்த நிலத்தில் உள்ள ஏற்ற இறக்கம் பொல நம் வாழ்கையிலும் இன்பமும் துன்பமும் இருக்கத்தான் செய்கிறது இரசிக்கும் படி அதை மாற்றும் சூட்சுமம் நம்(பிக்)கையில்தான் இருக்கிறது!!!! -புலோலியூர் கரன்-
இமை மூடி எனை மறந்து...!!!
பூமியவள் பொன் தோய்க்க ஒளி கொடுத்து உரமிழந்த உதயனவன் ஓய்வெடுக்க ஆழியிடை அரண் திரும்ப வானவில் வண்ண கோலமிட முகிலுறவு மகிழ்ச்சிகொண்டு அரவணைத்து உரசிடவே வாத்தியமாய் இடிமுழங்கிட திளைத்திருந்த சோகமது தடமின்றி தணிந்திடவே இதமான இயற்கைதனை தித்திக்க ரசித்து நின்றேன் மேலெழுந்த அலைநடுவே புகுந்துவந்த தென்றலது தாங்கி வந்த அலைத்துளியை இதமாக தெளித்திடவே இமை மூடி எனை மறந்து இதயமது உணர்ந்திடவே தென்றலோடு தழுவிநின்றேன் இயற்கையது இருக்கும்வரை இன்புறவே ரசித்திடுவோம் துன்பமெலாம் போக்கிடுவோம் ...!!! புலோலியூர் கரன்-
இதய நதியினிலே உதித்த சில இனிய செங்கமலங்களை கற்பனையில் வடித்ததுண்டு பதின்ம பருவ மயக்கங்களில் படிதாண்டி ரசித்ததுமுண்டு ஆயிரம் வண்ண இதழ் மலர்கள் உன்னருகில் வலை விரித்தபோதும் உன் இதழசைவில் என் உயிர் துடிக்கிறது உன்னால்தான் இன்னும் உலகம் இனிக்கிறது -புலோலியூர் கரன்-
கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........
மாமிச பிரியர்களே, சைவ சமய அன்பர்களே,ஐயர்மார்களே உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி உயிரே கொல்லாமல் அந்தந்த மிருகங்களின் இறைச்சிகளை உண்ணும் பாக்கியம் இன்றைய விஞ்ஞானத்தால் சாத்தியமாகி இருக்கிறது.
மறுவாழ்வு கிடைத்துவந்த போராளிகள்
வாழ்க்கை வீதியில் நிக்குது
எப்படி இவர்கள் தப்பி வந்தனர் என
எட்டப்பன் பட்டம் கட்டுது கூடவே
பல கட்டுகதை கட்டுது மொத்தத்தில்
இவர்களை ஒதுக்கியே வைக்குது
அன்றைய போராளிகள்
இன்றைய துரோகிகள் என்கிறது
சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....
சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....
மழைமேகம் நிலவதன்மேல் தவழ்ந்து விளையாடுவதுபோல் உன் நிலா முகத்தில் கார்குழல் வீழ்கிறதே உன் தங்க நிற அங்கத்தில் ஒட்டிய வைர மூக்குத்தியும் மங்கித்தான் போகிறது
உன் முகத்தின் அழகு கண்டு வானவில்லும் வயிறெரிந்து கருகித்தான் போனதுவே கருகிய வானவில்லும் உன் புருவம் ஆனதெப்போ
காந்தம் கொண்டு செய்த கருநிலா இரு விழியும் காளையர் மனங்களை கவர்வதில் மாயமில்லை
உதட்டோரம் குவியும் உன் புன்சிரிப்பில் சிதறாமல் ஓரிதயம் இருந்துவிட்டால் அது இப்பாரினிலே அதிசயமே
ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.. கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.
மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.
வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்
அப்பொழுதுதான் அந்த கீறல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம் " ஐ லவ் யூ அப்பா".
ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால்,அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து,ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.
இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து,முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''
''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை,அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.........................................
ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?
பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.
(1) ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
(2) அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும் , திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே
இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!
இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!
இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.
அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!
எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !
ஈர காற்று மெல்ல வீசி வந்து அவள் இதழோடு உரசி செல்ல காற்று பட்டு மூடித் திறந்த கண்கள் என்னை அருகில் சொக்கி இழுக்க பொறாமை கொண்ட மணல்கள் கண்ணில் புகுந்து கலகம் செய்ய புத்தி கொண்ட சில மணல்கள் அவள் அங்கம் ஒட்டி கொள்ள அதை தட்டிவிடும் சாக்கில் என்கைகள் அவளை தொட்டுவிட வெட்கி தலை கவிழ்ந்து அவளும் மெல்ல என் மடியில் ஒட்டிக்கொள்ள கைகளை மெல்ல மாலைகளாக்கி தன்னோடு இறுக்கிக்கொள்ள போக வழியன்றி வீசி வந்த தென்றலும் வெட்கி சென்று கடலிடம் முறையிட நியாயம் கேட்க வந்த அலையும் நம்மை பிரிக்க மனமின்றி பலமுறை திரும்பி செல்ல ஒன்றாய் கண்கள் மூடி கிடந்தோம் படகின் இனிய நிழலிலே பாரினை மறந்து மகிழ்ந்தோம்...!
கோவை மாதம்பட்டி குப்பனூரில் அற்புத சாமியார் அவதரித்திருக்கிறார் தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார். இந்துமதம் போல எங்காவது இப்படி அருள் வழங்க யாரும் இருக்கார்களா?
ஐம்பதடி உயரத்தில் இருந்து குழந்தைகளை தூக்கி எறிந்து கீழே சிலர் நின்று பிடிக்கிறார்கள் இது குழந்தைக்கு நல்லதாம் எப்படி எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள்...........
தாய் மண்ணில் கோடிகளில் தொழிற்சாலைகள் உன் மகளுக்கு கோடிகளில் சீதனம் வங்கியில் மில்லியன் கோடிகள் பணமாக இத்தனை இருந்தும் இறப்பர் செருப்பில் இந்தியர் மனதில் இடம் பிடிக்கும் சூட்சுமம் எப்படி அறிந்தாய் நிஜமாகவே நீ நடிகன்டா
இருப்பதை வாரி வழங்கிவிட்டு இல்லாமல் இருப்பதை போல இங்கு பெருமை பேசிக்கொள்ள இதுபோன்ற புத்தகங்கள் இருக்கும்வரை உன்னை தலைவன் என போற்றும் உருப்படாத ரசிகர்கள் இருக்கும்வரை நீதான் அடுத்த முதலமைச்சர் கல்விக்கண் திறந்த காமராஜர் கூட | உன் கருணைக்கு பின்தான்
அவர் உழைக்கிறாய் கொடுப்பது கொடுக்காதது அவர் விருப்பம் என்று யாரோ என்னை ஏசும் சத்தம் கேட்கிறது
இதுபோன்ற மக்களை வைத்து போற்றி புகழ்ந்து அசாதாரணமாக உழைப்பவன் கொடுக்க கூடாதென்றால் திருடுபவன்தான் கொடுக்கனும்
ஐயாயிரம் சம்பளம் பெறுபவன் கூட ஐநூறு கொடுக்கிறான் கோடிகளில் வாங்குபவன் உயிரிலும் மேலான ரசிகர்கள் என்று அடைமொழி சொல்பவன் கொடுக்கும் விகிதம்தான் என்ன?
நடிகனை நடிகன் என்றால் யாருக்கும் பிரச்சனை இல்லை தலைவன் என்கிறீர்களே அதனால் நாளை இதுபோன்ற சுயநலவாதிகள் நாடாழ ஆசை கொள்ளலாம் அதனால் தோலுரிக்க வேண்டியுள்ளது இந்த சுயநலவாதிகளை
உணவுக்கு வழியில்லாத எத்தனையோ பேர் உன்னை பார்த்து புகைக்க பழகினர் உன் உருவத்துக்கு ஏறி பாலூத்தினர் உனக்காக வேண்டி மண் சோறு உண்டனர் ஆயிரம் ஆன்மிகம் பேசும் உனக்கு இதை தடுக்க ஏன் வார்த்தை வரவில்லை இவை தவறென்று உரைக்க முடியவில்லை இவர்கள் அன்பை பார்த்து வியக்கிறேன் என்று நாடகமாடினாய் திரையில் மட்டுமல்ல அதை விஞ்சிய நடிகன் நீ நிஜத்தில்!!!!
நாகரீகம் இங்கே கூட கூட உடைகள் அங்கே குறைகின்றன புதிய உடையை கிழித்து அணியும் புதுமை புரட்சியும் நடக்கிறதங்கே இன்றைய கண்ணகிகள் போதைக்காக கற்பிழக்கும் கண்ணன் அழகிகளிவர்கள் கலியுக கர்ணன்களை உருவாக்கும் செல்வந்த சுகபோக வாரிசிவர்கள் சூரியன் மேல் பழி போடாத குந்திகள் சுகம் தேடி அலையும் இந்திரலோகமிது
மாற்ற உடையின்றி ஒருசமூகமிங்கே மழைக்கு ஒதுங்க இடமின்றி நனையுது கிழிந்த உடையை தைத்து தைத்து உடுத்தி கற்பு காக்கும் இவர்கள் தீண்டத்தகாதவரிங்கே சுருங்கிய வயிற்றை தண்ணீர் விட்டு நிரப்பும் சுந்தர மதன காம சுகபோகத்தவர் எச்சங்களிவர்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் நரக யுகமாக கடக்கும் கடவுள் குழந்தைகள் இவர்களும் மனிதர்கள்தான்!!!
துனிசியா நாட்டில் வாழும் அமீனா என்ற 19 வயது பருவப் பெண், தனது அரை நிர்வாணப் படத்தை தனது முகநூலில் வெளியிட்டார். "எனது உடல் எனக்குரியது, யாரையும் மகிமைப் படுத்துவதற்கு அல்ல." என்று அரபி மொழி வாசகங்களை தனது மார்பில் எழுதி வைத்திருந்தார். அந்தப் படம் வெளியானவுடன், நாலாபக்கமும் இருந்து மதவாதிகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அமீனாவை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று சில இஸ்லாமிய மதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயமுறுத்தல்களால், அமீனா தலைமறைவாக வாழ்வதாகவும், அவரது பெற்றோர் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் பல வதந்திகள் பரவின. இதே நேரம், உக்ரைனிய அரை நிர்வாண போராளிகளான Femen அமைப்பினர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று, 4 ஏப்ரல், உலகம் முழுவதும் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தும் தினமாக அறிவித்துள்ளனர். அதன் ஒரு கட்டமாக, Femen அமைப்பை சேர்ந்த ஐந்து பெண்கள், இன்று பெல்ஜியத்தில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். புருசெல்ஸ் நகரில் உள்ள, பெரிய மசூதிக்கு முன்னால் நடந்த அரை நிர்வாணப் போராட்டம், எந்த வித அசம்பாவிதமும் இன்றி முடிவுக்கு வந்துள்ளது. இன்று வேறு பல ஐரோப்பிய நகரங்களிலும், இதே போன்ற போராட்டங்கள் நடந்துள்ளன. அமீனாவுக்கு ஆதரவாக, உலகம் முழுவதிலும் இருந்து பல பெண்கள், இணையத்தில் தமது படங்களை பதிவேற்றி வருகின்றனர். இணையத்தில் அமீனாவுக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டையும் நடக்கின்றது. இதே நேரம், Femen இணையத்தளம் தாக்குதலுக்குள்ளாகி முடக்கப் பட்டுள்ளது.http://www.euronews.com/2013/04/04/femen-targets-islam-in-bare-breast-brussels-protest/
என் கஷ்டத்தை தீர்க்க கோவில் நோக்கிய பயணத்தில் பூசாரியின் அர்சனை சீட்டுக்கள் பிச்சைகாரர்களில் தட்டுக்கள் கடவுளின் உண்டியல்கள் என்னை நோக்கியே இருக்கின்றன நான் கடவுளை வணங்கமுன் என்னை வணங்க வாசலில் சிலர்!!!
எச்சரிக்கை :இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நன்று.........
கென்யா நாட்டின் மேற்குப்பகுதியில் "கீசி" இன மக்கள் வாழும் பிராந்தியத்தில் 15 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சுமார் 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீடுகளில் சோதனை நடத்தி இந்த 15 பேரையும் வெளியே இழுத்தெடுத்து. அவர்களை சூனியக்காரிகள் என குற்றம் சுமத்தி தெருவில் பலர் முன்னிலையில் உயிரோடு கொளுத்தியது. கென்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த திகில்சம்பவம், அரசாங்கத்தை விரைந்து நடவடிக்கை எடுக்க தூண்டியது. கும்பல் வன்முறையில் ஈடுபட்ட சிலரை கைது செய்தது. கிறிஸ்தவ மதம் அதிகாரம்செலுத்திய மத்திய கால ஐரோப்பாவில் நிலவிய "சூனியக்காரிகள் எரிப்பு வன்முறை", இன்று ஆப்பிரிக்க கிறிஸ்தவர்களிடையே பரவி வருகின்றது. மதம் வளர்க்கும் மூட நம்பிக்கைகளின் தீய விளைவுகளில் ஒன்று இது. அதிர்ச்சிதரும் "சூனியக்காரிகள் எரிப்பு" வீடியோவை இங்கே இணைத்துள்ளேன்.
உதயனின் கள்ள காதலால் பூமியை பிரிந்தவள் நான் என்பிரிவால் வறண்டது பூமி காதல் பயனத்தினிடையில் முகிலவன் மோகத்தால் அவள் அணைப்பில் சிலநேரம் உரசிடும் முகில்களின் உக்கிர மோதலில் சிந்திய உதிரமாய் பார்தனில் வந்து மீண்டும் வீழ்ந்தேன் துள்ளி குதித்து மகிழ்கிறேன் மழைதுளியாக!!! அடுத்த பயணத்திற்காக நீர்த்துளியாக!!!