கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

என் வாழ்கையை என்னை வாழவிடு.

உன் விவேகத்தை புகுத்தாதே என் வேகத்தை கூட்டவிடு மதங்களை திணிக்காதே மனிதத்தை உணர விடு கலாச்சாரத்தை காக்க சொல்லாதே இளமையை உணரவிடு

ஒரு மிருகம் உயிருடன் இருக்கும்போது அதன் இறைச்சியை உண்ணும் மனிதர்கள் (காணொளி)

மாமிச பிரியர்களே, சைவ சமய அன்பர்களே,ஐயர்மார்களே உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி உயிரே கொல்லாமல் அந்தந்த மிருகங்களின் இறைச்சிகளை உண்ணும் பாக்கியம் இன்றைய விஞ்ஞானத்தால் சாத்தியமாகி இருக்கிறது.

TENGLISH KISS கொடுத்து குழந்தை பாக்கியம் (KISS சாமியார்)

தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார்.

யார் துரோகி? ஈழமும் தமிழர்களும். ...!!!

மறுவாழ்வு கிடைத்துவந்த போராளிகள் வாழ்க்கை வீதியில் நிக்குது எப்படி இவர்கள் தப்பி வந்தனர் என எட்டப்பன் பட்டம் கட்டுது கூடவே பல கட்டுகதை கட்டுது மொத்தத்தில் இவர்களை ஒதுக்கியே வைக்குது அன்றைய போராளிகள் இன்றைய துரோகிகள் என்கிறது

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

முதியோர் இலத்தில் அன்னையர் தினம்...!!!



கர்ப்பகிரகத்தில் 

கடவுளை கண்டர் யார் 
கண்டதில்லை இதுவரை நான் 

கர்ப்பபையில் எம்மை சுமந்த 
கடவுள் உன்னை இல்லையென்று 
கதைத்தவர் யார் எவருமில்லை

உன் கருவறைதான் எமக்கு
உலகினில் முதல் உறை
உயிர் கொடுத்து உருவளர்த்த
உயிருள்ள உண்மை கடவுள் நீ

உயிர் கொடுத்த உன்னை
உருக்குலைய விட்டுவிட்ட
உறவின்றி தவிக்க வைத்து
உலக இன்பத்தில் உருள
உன் பிள்ளை சென்றுவிட்டான்

கருவறையை முதலறையாக்கி
உயிர் கொடுத்தாய்

இறுதியில் இப்படி ஓர் அறையில்
தனியாக தவிக்கவிட்டு
உன் உயிரை எடுக்கத்தானா?!!!

-புலோலியூர் கரன்-

கொட்டி கிடக்கும் தமிழை ஒட்டி பார்க்க

வீசும் தென்றல் காற்று 
கிச்சு கிச்சு மூட்ட 
கூச்சம் தாங்காமல் 
தென்னம் கீற்றுக்கள் 
நளினம் காட்டி நெளிய 

பூவரசம் மரங்கள்
பீபீ செய்ய தூண்டி
இலைகள் காட்டி நிக்க

குளிக்க வந்த புற்கள் சில
விட்டு போக மனமின்றி
ஊறி கிடக்க

தண்ணீரில் தன் அழகை
எட்டி பார்த்து ரசிக்கும்
வளைந்த மரங்கள்
என் ரசனையை தட்டி
எழுப்ப

இத்தனை அழகினை
மொத்தமாக பார்த்திராத
என்
மயங்கிய மனமோ
கொட்டி கிடக்கும் தமிழை
ஒட்டி பார்க்க தூண்ட

எத்தனை வித மரங்கள்
இத்தனை ஒற்றுமையாய்
ஏதோ ஒன்றை சொல்லி போக

இரு பக்கமும் சமமாக
போடும் துடுப்பில் நகரும்
படகின் தத்துவத்தையும்
புரிந்தவனாக நகர்கிறேன்
ரசிகனாக நான் படகினில் ...