கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

என் வாழ்கையை என்னை வாழவிடு.

உன் விவேகத்தை புகுத்தாதே என் வேகத்தை கூட்டவிடு மதங்களை திணிக்காதே மனிதத்தை உணர விடு கலாச்சாரத்தை காக்க சொல்லாதே இளமையை உணரவிடு

ஒரு மிருகம் உயிருடன் இருக்கும்போது அதன் இறைச்சியை உண்ணும் மனிதர்கள் (காணொளி)

மாமிச பிரியர்களே, சைவ சமய அன்பர்களே,ஐயர்மார்களே உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி உயிரே கொல்லாமல் அந்தந்த மிருகங்களின் இறைச்சிகளை உண்ணும் பாக்கியம் இன்றைய விஞ்ஞானத்தால் சாத்தியமாகி இருக்கிறது.

TENGLISH KISS கொடுத்து குழந்தை பாக்கியம் (KISS சாமியார்)

தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார்.

யார் துரோகி? ஈழமும் தமிழர்களும். ...!!!

மறுவாழ்வு கிடைத்துவந்த போராளிகள் வாழ்க்கை வீதியில் நிக்குது எப்படி இவர்கள் தப்பி வந்தனர் என எட்டப்பன் பட்டம் கட்டுது கூடவே பல கட்டுகதை கட்டுது மொத்தத்தில் இவர்களை ஒதுக்கியே வைக்குது அன்றைய போராளிகள் இன்றைய துரோகிகள் என்கிறது

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

என்னை 2000 மலேசிய வெள்ளிக்கு விற்ற எனது ஏஜென்ட் ...........


உனக்கு ஆங்கிலம் தெரியாததால் உன்னை ஊமை என்று போட்டு கனடா பாஸ்போட் எடுத்துத்தான் அனுப்ப போறன் அதனால நீ ஊமை பாசை படிக்கணும் என்றார் நடா .

நடராஜா இவர் பெயர். வயது ஒரு அம்பது இருக்கும். யாழ்ப்பாண தமிழர்தான் கனடா குடியுரிமை பெற்றவர். இவர்தான் என்னை இலங்கையில் இருந்து ஒரு சதம் காசு கூட வாங்காமல் கனடா கூட்டிட்டு போவதாக சொல்லி மலேசியாவிற்கு கூட்டி சென்றார். கனடா போனதன் பின்தான் முழுபணமும் தருவதாக பேச்சு.

மலேசியா சென்று எட்டு மாதமாகியும் என்னை அனுப்புவதாக தெரியவில்லை இந்த எட்டு மாதங்களில் பல சோதனைகள் நடந்தது, எனக்கு முன்பு சென்ற இருவர் என்னை விட ரொம்ப சின்ன பையன்கள் (12, 16  வயதில் இருவர்) அதில் ஒருவன் யாழ்மாவட்ட பொறுப்பாளராக இருந்த இளம்பருதியின் அக்கா மகன்(சபேசன்) அங்கு அவர்கள் என்னைவிட பல மாதம் காத்திருந்தார்கள் பலன் இல்லை இதனால் நடா மீது நம்பிக்கையே இல்லாமல் போய்க்கொண்டிருந்தது இருந்தும் நான் பல முறை எப்ப ஏத்துவீர்கள் என கேட்டுகொண்டே இருப்பேன். அப்போதுதான் ஒரு நாள் உனக்கு ஆங்கிலம் தெரியாததால் உன்னை ஊமை என்று போட்டு கனடா பாஸ்போட் எடுத்துத்தான் அனுப்ப போறன் அதனால நீ ஊமை பாசை படிக்கணும் என்றார்.... இதனால் மற்ற பையன்கள் கொஞ்சம் மனமுடைந்து போனார்கள் முதல் வந்த நாங்கள் இருக்க என்னை முதலில் ஏத்த போறார் போல இருக்கு என..........

நானும் அன்று ஊமை பாசை பழக தங்கியிருந்த ரூமில் இருந்து ஓரிடத்துக்கு நடாவினால் அழைத்துச் செல்லப்பட்டேன் அங்கு ஒரு 35 மதிக்கதக்க பெண் ஒருவர் இருந்தார் அவரின் தம்பிதான் ஊமை என்று எனக்கு சொல்லி இருந்தார். சில நாள் அவர்கள் வீட்டில் இருந்து ஊமை பாசை படித்துவிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அந்த பெண் கோலாலம்பூரில் இருந்து ஒரு ரெயிலில் ஏற்றி ஒருமணி நேரம் பயணம் செய்து ஒரு கிராமத்துக்கு கூட்டிசென்றார் சிறு மலை தொடர்கள் இருந்தது அந்த இடத்தில். இடத்தின் பெயர் எனக்கு நினைவில் இல்லை அதை நான் கவனத்தில் கொள்ளவில்லை என நினைக்கிறேன்.

அந்த பெண், அவர் கணவன், அவருடைய ஊமை தம்பி, அவருக்கு மூன்று பிள்ளைகள்(குட்டீஸ்) ஒன்று பெண் குழந்தை, மற்ற இருவரும் பையன்கள்.


காலையில் எல்லோரும் புறப்பட்டுவிடுவார்கள் மூன்று பிள்ளைகளையும் பாடசாலை அனுப்பி விட்டு அவர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிடுவார்கள் அங்கு ஒரு ரூமில்(Room) அந்த வாய் பெசமுடியாதவர் எப்போதும் ஒரு கணணி முன்னால் இருந்துகொண்டு ஆபாச படங்கள் பார்த்துக்கொண்டே இருப்பார்  என்னையும் அமர்ந்து பார்க்க சொல்லுவார். அப்பப்ப அவரின் சைகைகளில் எதாவது சொல்லுவார் நானும் ஒவ்வொன்றையும் மிக நுணுக்கமாக பார்த்து நானும் செய்து பார்த்துக்கொண்டேன் இப்படியாக இரண்டு நாட்கள் சென்றது காலையில் அவர்கள் செல்லும் போது சில வேலைகள் சொல்லிவிட்டு செல்வார்கள், துணி துவைக்கும் இயந்திரத்தில் துணிகள் இருக்கிறது அதை எப்படி இயக்குவதென சொல்லிகொடுத்து செய்யசொன்னார் செய்தேன், சமைக்க தெரியுமா என்றார்கள்......ஓம் என்றேன்.... அப்படியே சமைத்து வைக்கவும் சொன்னார்கள் சமையல் சாமான்கள் எங்கு இருக்கிறது என எல்லாம் காட்டினார். பல மாதங்களாக நடா எதை வாங்கி கொடுத்தாரோ அதை அரை குறையாக சாப்பிட்டு சாப்பிட்டு இருந்த எனக்கு நல்ல சந்தர்ப்பமாக விரும்பியதை சமைத்து சாப்பிடுவது இருந்தது.


பத்து நாட்கள் தாண்டி இருந்தது காலையில் எழுந்து அந்த குழந்தைகளுக்கு பாடசாலை உடை அணிந்து விடுவது உணவு எடுத்து வைப்பது, என சிறு சிறு வேலைகள், அதன் பின் ஊமை தம்பிக்கு உணவு தயாரித்து கொடுப்பது ,வீட்டை கூட்டி விடுவது, உடைகளை தோய்ப்பது, பின் அவர் படம் பார்த்துகொண்டிருக்கும் ரூமுக்குள் போய்  எதாவது கதைக்கிறாரா அவரையே பார்த்துகொண்டிருப்பேன் கதைத்தால் அவற்றை செய்து பழகுவது. அவர்கள் வேலை முடிந்து வந்ததும் பிள்ளைகளை உடை மாற்றி விடுவது, பின் அவர்களுக்கு விளயாட்டுகாட்டுவது என எனது நாட்கள் நகர்ந்தது......... ஆனாலும் எதையும் கற்றதுபோல திருப்தி எனக்கு இல்லை...

அன்று காலை வழமைபோல அவர்கள் சென்றபின் அவர்கள் வீட்டு தொலைபேசியில் இருந்து நடாவின் தொலைபேசிக்கு அழைத்தேன் அது நிறுத்தி வைக்கபட்டிருந்தது அதன் பின் தங்கி இருந்த ரூமுக்கு அதாவது அந்த வீட்டில் எங்களுக்கு ஒரு ரூமை வாடகைக்கு கொடுத்துவிட்டு இருக்கும் ஒரு அம்மா (ஜெயா) அவருக்கு தொலைபேசி எடுத்தேன். சபேசனிடம் பேசவேண்டும் நான் கரன் பேசுகிறேன் என்றது மட்டும்தான்.........என்ன தம்பி உங்க நடா சொல்லாமல் ஓடிப் போய்டார் எனக்கு மூன்று மாத ரூம் வாடகை கொடுக்கவில்லை இங்க இருக்கிற இரண்டு பையன்களையும் அப்படியே விட்டுட்டு போயிட்டார் அவங்களுக்கு யார் சாப்பாடு கொடுக்கிறது? என்றார். நீ எங்கே இருக்கிறாய் என்றார் ..........எனக்கு இடம் தெரியாது இப்படி ஊமை பாசை பழக வந்தேன் என்று சொன்னேன்....... சரி நீ உடனே இங்கே புறபட்டு வா என்றார் .....நானும் சரி இப்போது முடியாது நாளைக்கு வீட்டில் இருப்பவங்க வந்ததும் சொல்லிவிட்டு வாறன் என்றேன் அப்படியே சபேசனுடனும் கதைத்தேன் அவனும் அழாத குறையாக அண்ணா நடா நம்மள எமாத்திப்போட்டார் என்று சிணுங்கினான் ........வருவார் என்று நினைக்கிறேன் என்னை ஊமை பாசை பழக சொன்னார் தானே ஒருவேளை வாடகை காசு இல்லாததால சொல்லாம போயிருப்பார் எங்காவது போய்ட்டு காசு எடுத்துட்டு வருவாரோ தெரியாதே என்று நான் என் பங்குக்கு சமாதான படுத்தினேன் எனக்கு அந்த நேரம் எதுவும் புரியவில்லை குழப்பமாகவே இருந்தது .........சரி நான் நாளைக்கு வாறன் என்று சொல்லி இணைப்பை நிறுத்தினேன்.

இரவு வீட்டு பெண் வந்ததும் நடந்ததை சொன்னேன்.... ஏன் நடா கனடா போறதை உங்களுக்கு சொல்லல்லையா என்று கேட்டார்...........தலை சுத்தியது ......இல்லை என்றேன்........... எனக்கு அன்று உன்னை வேலைக்கு கொண்டுவந்து விடும்போதே சொல்லிதானே விட்டுட்டு போனார் என்றார்.......... வேலைக்கா??? என்னை????????? அதிர்ந்தது ஒரு கணம் ... நான் வேலைக்கு வரவில்லை ஊமை பாசை பழகத்தான் வந்தேன் என்றேன் ......என்ன தம்பி விளையாடுறீங்க உங்களை வேலைக்கு கொண்டுவந்து விட்டுட்டு பாவம் விசா இல்லை என்று சொல்லி அதுக்காக என்னிடம் 2000 வெள்ளி பணமும் வாங்கி போயிட்டார் என்றார்.... ஒருபுறம் கண்கள் கலங்கியது இன்னொருபுறம் நடா மீது கோவம் உச்சத்தில் இருந்தது.... அதெப்படி என்னை வேலைக்கு போட்டுவிட்டு அவர்  பணம் எடுக்க முடியும் அவர் என்னை வெளிநாடு அனுப்புவதாக சொல்லித்தானே இலங்கையில் இருந்து கூட்டிவந்தார் .......... நீ விசா இல்லாமல் சாப்பாடு இல்லாமல் கஷ்ட படுவதாக சொன்னார் சம்பளம் ஒன்றும் கொடுக்க வேண்டாம் தங்க இடமும், சாப்பாடும் கொடுத்தால் போதும் என்று சொன்னதால்தான் பணம் கொடுத்து உன்னை வேலைக்கு சேர்த்தேன் என்றார். இப்படியெல்லாம் ஒரு அனுபவம் கிடைக்குமென நான் எப்போதாவது நினைத்ததில்லை.......

அட பாவிங்களா வெளிநாடு போக சென்ற என்னை 2000 வெள்ளிக்கு விற்ற பெருமை நடாவை சேரும்......... யார் பெத்த பிள்ளையை யார் விற்கிறது???????

சரி இனி எனக்கு இங்கு இருக்க முடியாது நான் நாளைக்கு போக வேண்டும் என்றேன்..... அப்படி போக முடியாது நாங்கள் 2000 வெள்ளி பணம் கொடுத்திருக்கிறோம் அதை தந்துவிட்டு போகசொன்னார், இல்லை நான்கு மாதம் அந்த பணத்துக்கு வேலை செய்ய சொன்னார் மறுத்தால் போலிசுக்கு சொல்லி விசா இல்லாமல் இருபதற்கு உள்ளே போட்டுவிடுவதாக பயமுறுத்தினர்............... பேசினால் விபரீதம் என விளங்கியது நாலு மாதம் வேலைசெய்வதாக சொல்லி பிரச்சனையை முடித்து வைத்தேன்...

வழமை போல மறுநாள் அவர்கள் வெளியாகியதும் எப்போதும் ஊமைத்தம்பி கணணி மேசையில் பணம் வைத்து இருப்பார் அவர் சாப்பிட போகும் பொது அதில் 100 வெள்ளி பணத்தை எடுத்துகொண்டு எனது பையையும் எடுத்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன் வேகமாக நடக்க ஆரம்பித்தேன் வழியில் யாரவது தமிழர்கள் வருகிறார்களா என அலசிக்கொண்டே வந்தேன் பொட்டு வைத்துகொண்டு வந்த பெண்ணிடம்  கோலாலம்பூர் போகும் பஸ் எங்கே என கேட்டு அதன் படி அங்கு போய் சேர்ந்தேன் பின் பழைய வீட்டு அம்மாவுக்கு தரிப்பிடத்தில் இருந்த தொலைபேசியில் இருக்கும் இடத்தை சொன்னேன் காத்திருக்க சொல்லி வந்து அழைத்து போனார் ......... 



ரூமுக்கு போனதும் அந்த பெண் தன் பிரச்சனைகளை திணித்தார் 3 மாத வாடகை தரவேண்டும் இப்போது சாப்பாடு கொடுக்கும் காசும் தரவேண்டும் என்றார் ........... வேறு வழியில்லாமல் அவரிடமே எனக்கு வேலை ஒன்று பார்த்து தர சொன்னேன் அதன் படி ஒரு கார் கழுவும் இடத்தில் வேலைக்கு சேர்ந்தேன் , அப்படியே சபேசனுக்கும் ஒரு உணவு விடுதியில் வேலை கிடைத்தது மற்ற சிறுவனை அவர்கள் உறவினர்களுடன் பேசி இலங்கைக்கு அனுப்பி வைத்தோம்.........




நான் வீட்டுக்கு என்னை விற்ற பிரச்சனைகளை சொல்லவில்லை நடா விட்டுட்டு போனதை சொன்னேன் வேறு பிரச்சனை எதுவும் இல்லை என்றும் சொன்னேன் அவர்களையும் கவலைபடுத்தி எதுவும் ஆகபோவதில்லையென நன்றாக புரிந்தது ....... வீட்டில் இருந்து இன்னொரு ஏஜென்ட்டிடம்  பேசி ஒழுங்கு பண்ணினார்கள் ......அவர் வந்து என்னை அழைத்தார் ,சபேசனுக்கும் வீட்டில் வேறு ஏஜென்ட் பார்த்து கொண்டிருப்பதாகவும் என்று சொன்னதால் அவனுக்கும் வேலை செய்யும் உணவு விடுதியில் தங்கும் வசதி இருப்பதால் இருவரும் ரூமை விட்டு வெளியாகி பிரிந்து போனோம்.................

மற்ற ஏஜென்ட்.............அவர் மட்டும் என்ன சளைத்தவரா அடுத்த பாகம் ஆரம்பமாச்சு...............................