சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

வழிமேல் விழிவைத்து..



வெள்ளி மலர் சிந்திடும் 

நிலவொளித் தேனினிலே 
பொண் ஒளி படரவிடும்
பொழிந்த பருவங்கொண்ட 
பரவச மெய்யுடையாள் 
தேன்சுவைத்த வேளைகளில்
தென்னவன் ஸ்பரிசங்களை
செவ்வாய் உமிழ் சுரக்க
செறிந்திடும் நதியினிலே நாணம்
விரல்கொண்டு ஸ்வரங்கள் மீட்ட
கள்ளிடையாள் கரம் பிடிக்க
உதயன் உதிப்பதற்குள்
திடந்தோளான் வரவுக்காய்
ஏக்கமுற லயித்திருந்தாள் !!!


-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

0 comments:

Post a Comment