சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

அவள் நினைவுகளில்....!!!


கவலையில் இருந்தேன்
 
கனவுகள் இல்லை அவள்
நினைவுகளால் எனக்கு
தூக்கங்கள் இல்லை 

கண் மூடியும் விழித்திருந்தேன் 
தையலவள் கூந்தலிடை 
முகம்புதைத்த நினைவுகளில்

கண் விழித்திருந்தும் 
லயித்திருந்தேன் அவள் 
சுவாசம் தடவிய ஸ்பரிச 
பொழுதுகளை மீட்டியபடி

5 comments:

  1. இறுதி நான்கு வரிகள் மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரசனைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி....

      Delete