தங்கங்கள் தான் மின்னுமே
ஏனோ பெண்ணே உன்
அங்கங்கள் மேலிருப்பதால்
மங்கித்தான் போகின்றன
உன்மேல் வானவில்லுக்கு
என்ன இத்தனை உரிமை
சேலையாகி மானம் காக்கிறதே
மானம் காப்பதாக சொல்லி
உன் சோலை தழுவியே
என் கோவம் தூண்டுதே
பூக்கள் பூத்து குலுங்கும்
அழகிய நந்தவனத்தில்
உன்னையன்றி எதையும்
பார்க்க தோன்றவில்லையே
உன் நளினம் கண்டு மயங்கி
மயிலும் நடனம் கற்க வந்ததோ
உன்னசைவு கொண்டு அன்னமும்
நடை பயின்று சென்றதோ
வண்ணத்து பூச்சியொன்று
தேன் குடிக்க வாடி நிக்குதே
உன் பாதத்தை புது மலரென
மதி மயங்கியே
பூமிக்கு பிறைநிலா அழகு
உன் நிலா முகத்தில்
இரு பிறைநிலா இமைகள்
பேரழகு...!!!
-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans
கவிதை நன்று ரசித்தேன்.
ReplyDeleteநன்றி நண்பரே.. உங்கள் ரசிப்பு என் ஊட்டம்...
Deleteரசிக்க வைக்கும் வரிகள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
உங்கள் ரசனையான கருத்து மிக்க மகிழ்ச்சி..
Deleteபடமும் கவியும் வரிகளும் அருமை ரசித்தேன். வாழ்த்துக்கள் தொடருங்கள்.
ReplyDeleteநன்றி நண்பரே.......
Delete