சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

என்னை வணங்க வாசலில் சிலர்!!!


என் கஷ்டத்தை தீர்க்க 

கோவில் நோக்கிய பயணத்தில் 
பூசாரியின் அர்சனை சீட்டுக்கள் 
பிச்சைகாரர்களில் தட்டுக்கள் 
கடவுளின் உண்டியல்கள் 
என்னை நோக்கியே இருக்கின்றன
நான் கடவுளை வணங்கமுன்
என்னை வணங்க வாசலில் சிலர்!!!



-புலோலியூர் கரன்-

என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

10 comments:

  1. ம்.... உண்மை

    அழகாக சொன்னீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி நண்பரே........

      Delete
  2. Replies
    1. ம்ம் .. நன்றி நண்பரே..

      Delete
  3. அருமை அருமை
    தினமும் சந்திக்கிற நிகழ்வுதான்
    ஆயினும் அதை வித்தியாசமாக சிந்தித்து
    அருமையான கவிதையாக்கியது மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும்..

      Delete
  4. Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  5. இவை தினமும் பார்க்கும் விஷயங்கள் தான் என்றாலும் இப்போது தான் என் கண்களுக்கு தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. ம்ம் உண்மைதான்...இவை தினமும் பல காலமாக நடக்கும் விடயங்கள்...

      Delete