சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

இணையத்தில் கவியாகிவிட்டாய் ...!


கிளையோடு விளையாடி 

இலையோடு உறவாடி 
கனியோடு பசியாறி 
மனதோடு இதமாகி 
கணணியோடு  காட்சியாகி 
இணையத்தில் கவியாகிவிட்டாய் ...!

6 comments:

  1. உண்மைதான் .பசியாறும் இந்த அணிலின் படமே கவிதைதான்

    ReplyDelete
    Replies
    1. ம்ம் நன்றி நண்பரே..

      Delete
  2. அழகிய படம் அருமையான கவிதை. வாழ்த்துக்கள் சகோ!

    பிள்ளையே துள்ளிநீ
    கிள்ளிடும் கனியோருசி
    தள்ளியே போய்விடு புலோலியூர்கரன்
    சுள்ளியால் தாக்கிடுவான்
    புள்ளியாய் போகுமுன்
    சொல்லிடுறேன் ஓடிடு நீ...

    படத்தைப் பார்த்ததும் நகைச்சுவைக்காய் இப்படிக் கிறுக்கினேன். பிடிக்கவில்லையாயின் நீக்கிவிடுங்கள் சகோ.
    குறையில்லை...:)

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கவிதைக்கு கவியால் கருத்துக்கும் ...

      Delete
  3. அருமையான படத்துக்கு
    அழகான கவிதைவரி தொடுத்து
    கண்ணுக்கு விருந்தாக்கி
    கற்பனைக்கு வரி தொடுத்து
    நல்லதொரு கவிதையாக்கி
    விட்டிர்கள் ..

    ReplyDelete
  4. நன்றி Nalayini Thiyagalingam

    ReplyDelete