சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

ஒழுக்கமில்லை எனக்கு....



உதயனின் கள்ள காதலால் 

பூமியை பிரிந்தவள் நான் 
என்பிரிவால் வறண்டது பூமி
காதல் பயனத்தினிடையில் 
முகிலவன் மோகத்தால் 
அவள் அணைப்பில் சிலநேரம்
உரசிடும் முகில்களின்
உக்கிர மோதலில் சிந்திய
உதிரமாய் பார்தனில்
வந்து மீண்டும் வீழ்ந்தேன்
துள்ளி குதித்து மகிழ்கிறேன்
மழைதுளியாக!!!
அடுத்த பயணத்திற்காக
நீர்த்துளியாக!!!

4 comments:

  1. வித்தியாசமான பார்வையில்...

    ReplyDelete
    Replies
    1. சிறு முயற்சி .. நன்றி..

      Delete
  2. அட..! அருமை...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தொடர் வருகையும் வாழ்த்துகளும் மனதை மகிழ்விக்கிறது ,,,, நன்றி நண்பரே..

      Delete