சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

உமாதேவி உடலில் இத்தனை அழுக்கா...!!!


உலகை காக்கும் உமையவள் 

உடல்தனில் அத்தனை அழுக்கா? 

உருட்டி உருவம் செய்து 
உயிர் கொடுக்கும் அற்புத 
அறிவியல் கடவுளர் உலகினில் 
பார்வதி குளிக்க காவலர் ஏனோ?

யாரிடமிருந்து காத்திட சொல்லி
குளித்திடும் இடமதில்
உயிர் கொடுத்த உருவத்தினை
வாசலின் காவல் வைத்தார்?

அவனன்றி அணுவுமசையாத
அற்புத சக்திவான் சிவன் கூட
தன் பிள்ளை இவனென
அறிந்திடா மாயமென்ன
பிள்ளை"யார்" என கேட்டது சரியா?

0 comments:

Post a Comment