சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

கொட்டி கிடக்கும் தமிழை ஒட்டி பார்க்க

வீசும் தென்றல் காற்று 
கிச்சு கிச்சு மூட்ட 
கூச்சம் தாங்காமல் 
தென்னம் கீற்றுக்கள் 
நளினம் காட்டி நெளிய 

பூவரசம் மரங்கள்
பீபீ செய்ய தூண்டி
இலைகள் காட்டி நிக்க

குளிக்க வந்த புற்கள் சில
விட்டு போக மனமின்றி
ஊறி கிடக்க

தண்ணீரில் தன் அழகை
எட்டி பார்த்து ரசிக்கும்
வளைந்த மரங்கள்
என் ரசனையை தட்டி
எழுப்ப

இத்தனை அழகினை
மொத்தமாக பார்த்திராத
என்
மயங்கிய மனமோ
கொட்டி கிடக்கும் தமிழை
ஒட்டி பார்க்க தூண்ட

எத்தனை வித மரங்கள்
இத்தனை ஒற்றுமையாய்
ஏதோ ஒன்றை சொல்லி போக

இரு பக்கமும் சமமாக
போடும் துடுப்பில் நகரும்
படகின் தத்துவத்தையும்
புரிந்தவனாக நகர்கிறேன்
ரசிகனாக நான் படகினில் ...

2 comments:

  1. பலவற்றை சொல்கிறது வரிகள்...

    ReplyDelete
  2. தொடர் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துக்கு நன்றி..

    ReplyDelete