சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

திணறித்தான் போகிறேன் நானே


நுதல் நக்கும் கார் குழலே - உனை 

அவள் கோதும் வார் விரல் அழகே 
இதைக் கண்டவர் எழுதுவர் கவியே 

மதி வதனம் பூத்த செவ்விதழே - உன் 
தேன்சுளை சுவைத்திட நா ஊறுதே 
நாளும் நீ இசைந்திட மனம் ஏங்குதே

கதை பேசும் மின் கயல் விழியே - உனை
தினம் கண்டும் தித்திப்பு புதிதே
திணறித்தான் போகிறேன் அதில் நானே

மெய் காய்த்துத் திமிரும் பருவக் கனியே – உனை
கண்டதும் விழுங்கிட உமிழ் சுரக்குதே
விரல்களும் தவழ்ந்திடத் துடிக்குதே

கனி தாங்கி விழுந்திடும் கொடியினை போலே – உன்
நடையினில் இடையதன் முறிவுகள் நளினமே
இதைக் கான கண் கோடி எனக்கும் வேண்டுமே

நின் அழகினை முழுங்கிடும் என் கண்களை கண்டு – உன்
கால் விரல்களால் போட்டிடும் கோலம் தாஜ்மகாலே!!!

2 comments:

  1. வணக்கம்!

    திருவள்ளுவா் ஆண்டு 2045
    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
    எங்கும் இனிமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
    சங்கத் தமிழாய்ச் சமைத்து!

    பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
    கங்குல் நிலையைக் கழித்து!

    பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
    எங்கும் பொதுமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
    தொங்கும் உலகைத் துடைத்து!


    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. கவிதை வரிகள் அருமை...

    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete