சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

என் வாழ்கையை என்னை வாழவிடு.

உன் விவேகத்தை புகுத்தாதே 
என் வேகத்தை கூட்டவிடு

மதங்களை திணிக்காதே
மனிதத்தை உணர விடு

கலாச்சாரத்தை காக்க சொல்லாதே
இளமையை உணரவிடு




மூடநம்பிக்கையை விதைக்காதே
அறிவை வளரவிடு

உன் முடிவை நம்பச்சொல்லாதே
தேடலை பெருக்கவிடு

உன் பாதையில் போகச்சொல்லாதே
எனக்கான பாதையை உருவாக்கவிடு

உன் ரசனையில் மகிழச்சொல்லாதே
என்னை ரசிக்கவிடு

உன் லட்சியத்தை சுமக்கசொல்லாதே
என் லட்சியத்தை அடையவிடு

என்னை புகழாதே
என்னை அறியவிடு

என் வாழ்கையை நீ வாழாதே
என்னை வாழவிடு.

2 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே..

      Delete