பாடசாலை பரீட்சை காலங்களுக்கு பிறக்கு அன்றுதான் என் மனம் அப்படி ஒரு பதட்டமான நிலையில் இருப்பதை என்னால் நன்றாக உணரமுடிந்தது இன்று அந்த சம்பவம் நடந்து ஒரு பன்னிரண்டு வருடங்கள் ஆகியும் என் மனதில் அழியாத நினைவாக அந்த சம்பவமும் இருப்பது மறுக்க முடியாத உண்மை.
கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.
கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........
என் வாழ்கையை என்னை வாழவிடு.
உன் விவேகத்தை புகுத்தாதே என் வேகத்தை கூட்டவிடு மதங்களை திணிக்காதே மனிதத்தை உணர விடு கலாச்சாரத்தை காக்க சொல்லாதே இளமையை உணரவிடு
ஒரு மிருகம் உயிருடன் இருக்கும்போது அதன் இறைச்சியை உண்ணும் மனிதர்கள் (காணொளி)
மாமிச பிரியர்களே, சைவ சமய அன்பர்களே,ஐயர்மார்களே உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி உயிரே கொல்லாமல் அந்தந்த மிருகங்களின் இறைச்சிகளை உண்ணும் பாக்கியம் இன்றைய விஞ்ஞானத்தால் சாத்தியமாகி இருக்கிறது.
TENGLISH KISS கொடுத்து குழந்தை பாக்கியம் (KISS சாமியார்)
தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார்.
யார் துரோகி? ஈழமும் தமிழர்களும். ...!!!
மறுவாழ்வு கிடைத்துவந்த போராளிகள் வாழ்க்கை வீதியில் நிக்குது எப்படி இவர்கள் தப்பி வந்தனர் என எட்டப்பன் பட்டம் கட்டுது கூடவே பல கட்டுகதை கட்டுது மொத்தத்தில் இவர்களை ஒதுக்கியே வைக்குது அன்றைய போராளிகள் இன்றைய துரோகிகள் என்கிறது
சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-
Followers
தமிழில் பேசியதால் பாதை மாறிய என் வாழ்க்கை...........
பாடசாலை பரீட்சை காலங்களுக்கு பிறக்கு அன்றுதான் என் மனம் அப்படி ஒரு பதட்டமான நிலையில் இருப்பதை என்னால் நன்றாக உணரமுடிந்தது இன்று அந்த சம்பவம் நடந்து ஒரு பன்னிரண்டு வருடங்கள் ஆகியும் என் மனதில் அழியாத நினைவாக அந்த சம்பவமும் இருப்பது மறுக்க முடியாத உண்மை.
என் வாழ்கையை என்னை வாழவிடு.
என் வேகத்தை கூட்டவிடு
மதங்களை திணிக்காதே
மனிதத்தை உணர விடு
கலாச்சாரத்தை காக்க சொல்லாதே
இளமையை உணரவிடு
மூடநம்பிக்கையை விதைக்காதே
அறிவை வளரவிடு
உன் முடிவை நம்பச்சொல்லாதே
தேடலை பெருக்கவிடு
உன் பாதையில் போகச்சொல்லாதே
எனக்கான பாதையை உருவாக்கவிடு
உன் ரசனையில் மகிழச்சொல்லாதே
என்னை ரசிக்கவிடு
உன் லட்சியத்தை சுமக்கசொல்லாதே
என் லட்சியத்தை அடையவிடு
என்னை புகழாதே
என்னை அறியவிடு
என் வாழ்கையை நீ வாழாதே
என்னை வாழவிடு.
ஒரு மிருகம் உயிருடன் இருக்கும்போது அதன் இறைச்சியை உண்ணும் மனிதர்கள் (காணொளி)
ஆமா எனக்கு ஒரு சந்தேகம் ஒரு உயிரை கொல்லாமல் ஒரு மிருகத்தின் இறைச்சி உண்ண முடிந்தால் இது சைவ உணவா? அசைவ உணவா?
மாமிச பிரியர்களே, சைவ சமய அன்பர்களே,ஐயர்மார்களே உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி உயிரே கொல்லாமல் அந்தந்த மிருகங்களின் இறைச்சிகளை உண்ணும் பாக்கியம் இன்றைய விஞ்ஞானத்தால் சாத்தியமாகி இருக்கிறது.
முதல் முதலில் பசுமாடு ஒன்றின் ஸ்டெம் செல்லின் இருந்து ஒரு test-tube burger செய்து சாதனை புரிந்துள்ளனர்.இது இன்னும் சில காலங்களில் சந்தைக்கு வந்துவிடும்.
ஸ்டெம் செல்/அணு என்றால் என்ன?
எங்கள் உடலில் 210 வகை வித்தியாசமான அணுக்கள் உண்டு இவை எல்லாம் அடிபடையில் ஒரு அணுவில் இருந்து உருமாறியவையே அப்படி எந்த செல்/அணுவுக்கு எல்லாவகையான அணுவாக தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் இருக்கிறதோ அதுவே ஸ்டெம் செல் ஆகும்.
மனித உடலிலுள்ள ஏறக்குறைய ஒரு இலட்சம் அணுக்களும் அடிப்படையில் ஒருவகையான செல்லாக இருந்து மாறியவையே அந்த அடிப்படை செல்தான் ஸ்டெம் செல் இவ்வகையான செல்களை கொண்டே அனைத்து உயிரினங்களும் உருவாகி இருகின்றன. உடலில் உள்ள மற்றைய செல்களுக்கு இல்லாத சிறப்பு ஸ்டெம் செல்களுக்கு உண்டு இவ்வகையான ஸ்டெம் செல்லுக்கு இருவகையான குணங்கள் உண்டு..
அ) தன்னைதானே புதுப்பித்துக்கொண்டு(Self renewal) , தன்னை போல ஒரே பண்புடைய மற்றொரு அணுவை தானே உருவாக்கும் திறன்கொண்டது.
ஆ) உடலில் உள்ள எல்லா வகையான அணுக்களாகவும் தன்னை மாற்றிக்கொள்ளும் திறமை உடையது. (Totipotency/Pluripotency)
ஸ்டெம் செல் இருவகைப்படும்
அ)சிசு ஸ்டெம் செல்கள் (Embryonic Stem cells, ESC) (சிசுக்களில் இருப்பவை)
ஆ)திசு ஸ்டெம் செல்கள் (Tissue stem cells/Adult stem cells) (உடலில் சிலவகையான திசுக்களில் இருப்பவை)
இப்படியான ஸ்டெம் செல்களை தசைகள், தோல்கள், மற்றும் ஸ்டெம் செல்கள் இருக்கும் இடங்களில் இருந்து பிரித்தெடுத்து அவற்றை மரபணுவியல் தொழில்நுட்பத்தின் மூலம் மாற தூண்டபடுகிறது. இவை மனிதனுக்கு பலவகையில் உதவியாக இருக்கிறது அவரவர் செல்களில் இருந்தே அவரவருக்கு தேவையான உடல் பாகங்களை எதிர் காலங்களில் தயாரிக்க, புற்று நோய்க்கு இதன் மூலம் தீர்வு காணலாம் என பலரும் பலவிதமாக அராட்ச்சி செய்துகொண்டிருக்கும் போது இப்படியொரு அதிரடி செயற்கை இறைச்சியை இந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கி வியக்க வைத்திருக்கிறார்கள்.
ஒரு பசு மாட்டின் தசையில் இருந்து எடுத்த திசுவில் இருந்து ஸ்டெம் செல் பிரித்தெடுத்து அதில் இருந்து மரபணு தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கை இறைச்சியினை தயாரித்து அதில் இருந்து முதல் முதலில் Burger தயாரிக்க பட்டுள்ளது அதற்கான காணொளி .. இனி உயிர்களை கொலை செய்து இறைச்சியை ருசிக்க தேவையில்லை......
இதையும் வாசிக்கவும்.....
கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.
முதியோர் இலத்தில் அன்னையர் தினம்...!!!
கர்ப்பகிரகத்தில்
கடவுளை கண்டர் யார்
கண்டதில்லை இதுவரை நான்
கர்ப்பபையில் எம்மை சுமந்த
கடவுள் உன்னை இல்லையென்று
கதைத்தவர் யார் எவருமில்லை
உன் கருவறைதான் எமக்கு
உலகினில் முதல் உறை
உயிர் கொடுத்து உருவளர்த்த
உயிருள்ள உண்மை கடவுள் நீ
உயிர் கொடுத்த உன்னை
உருக்குலைய விட்டுவிட்ட
உறவின்றி தவிக்க வைத்து
உலக இன்பத்தில் உருள
உன் பிள்ளை சென்றுவிட்டான்
கருவறையை முதலறையாக்கி
உயிர் கொடுத்தாய்
இறுதியில் இப்படி ஓர் அறையில்
தனியாக தவிக்கவிட்டு
உன் உயிரை எடுக்கத்தானா?!!!
-புலோலியூர் கரன்-

















