கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

என் வாழ்கையை என்னை வாழவிடு.

உன் விவேகத்தை புகுத்தாதே என் வேகத்தை கூட்டவிடு மதங்களை திணிக்காதே மனிதத்தை உணர விடு கலாச்சாரத்தை காக்க சொல்லாதே இளமையை உணரவிடு

ஒரு மிருகம் உயிருடன் இருக்கும்போது அதன் இறைச்சியை உண்ணும் மனிதர்கள் (காணொளி)

மாமிச பிரியர்களே, சைவ சமய அன்பர்களே,ஐயர்மார்களே உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி உயிரே கொல்லாமல் அந்தந்த மிருகங்களின் இறைச்சிகளை உண்ணும் பாக்கியம் இன்றைய விஞ்ஞானத்தால் சாத்தியமாகி இருக்கிறது.

TENGLISH KISS கொடுத்து குழந்தை பாக்கியம் (KISS சாமியார்)

தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார்.

யார் துரோகி? ஈழமும் தமிழர்களும். ...!!!

மறுவாழ்வு கிடைத்துவந்த போராளிகள் வாழ்க்கை வீதியில் நிக்குது எப்படி இவர்கள் தப்பி வந்தனர் என எட்டப்பன் பட்டம் கட்டுது கூடவே பல கட்டுகதை கட்டுது மொத்தத்தில் இவர்களை ஒதுக்கியே வைக்குது அன்றைய போராளிகள் இன்றைய துரோகிகள் என்கிறது

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

Showing posts with label ஏழ்மை. Show all posts
Showing posts with label ஏழ்மை. Show all posts

சூரியன் மேல் பழி போடாத குந்திகள்



நாகரீகம் இங்கே கூட கூட 

உடைகள் அங்கே குறைகின்றன 
புதிய உடையை கிழித்து அணியும் 
புதுமை புரட்சியும் நடக்கிறதங்கே 
இன்றைய கண்ணகிகள் போதைக்காக 
கற்பிழக்கும் கண்ணன் அழகிகளிவர்கள் 
கலியுக கர்ணன்களை உருவாக்கும்
செல்வந்த சுகபோக வாரிசிவர்கள்
சூரியன் மேல் பழி போடாத குந்திகள்
சுகம் தேடி அலையும் இந்திரலோகமிது

மாற்ற உடையின்றி ஒருசமூகமிங்கே
மழைக்கு ஒதுங்க இடமின்றி நனையுது
கிழிந்த உடையை தைத்து தைத்து உடுத்தி
கற்பு காக்கும் இவர்கள் தீண்டத்தகாதவரிங்கே
சுருங்கிய வயிற்றை தண்ணீர் விட்டு நிரப்பும்
சுந்தர மதன காம சுகபோகத்தவர் எச்சங்களிவர்கள்
ஒவ்வொரு நிமிடத்தையும் நரக யுகமாக கடக்கும்
கடவுள் குழந்தைகள் இவர்களும் மனிதர்கள்தான்!!!

என்னை வணங்க வாசலில் சிலர்!!!


என் கஷ்டத்தை தீர்க்க 

கோவில் நோக்கிய பயணத்தில் 
பூசாரியின் அர்சனை சீட்டுக்கள் 
பிச்சைகாரர்களில் தட்டுக்கள் 
கடவுளின் உண்டியல்கள் 
என்னை நோக்கியே இருக்கின்றன
நான் கடவுளை வணங்கமுன்
என்னை வணங்க வாசலில் சிலர்!!!



-புலோலியூர் கரன்-

என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

ஏழைக்கு கல்வி கனவு..!!!



எட்டா உயரத்தில் 

வியாபாரக்கல்வி 
ஏறி நின்றால் 
ஏழையின் வாழ்வு 
இப்படி வீதியில் 
நசுங்கி நிக்கும் ....!!!

காக்கையிடம் கற்கவேண்டிய மனிதம்...!!!


பணம் படைத்த பகவான்களுக்காக 

பட்டணத்திற்கு பாரிரங்கிவந்த 
இந்திரலோக சுந்தர விடுதிகளில் 
கலியுக கிருஷ்ண காமலீலைகள் 
கற்புக்கு பணம் என கணக்கு போடும் 
போதைக்காக பாதை மாறும் 
இலகணமில்லா இல்லறமிது
இவர்கள் சொல்வதே வேதம்
இதுதான் இன்றைய மார்க்கம்
நாளைய பெரியமனிதர்கள்
உருவாகும் உன்னத பூமியிது

பட்டாடை தினமும் பலவுடுத்தி
பல கோடி நவரத்தின நகை போட்டு
பாரினை காத்திடும் கரும் கற்களுக்கு
நாளும் நடத்திடும் அபிஷேகத்தில்
வெளிசிந்தும் கழிவை கரம் சேர்த்து
காத்திருந்து பருமும் ஏழையை போல
பகட்டு இரவு விடுதி மன்மதர்களின்
மிஞ்சிய நாகரிக எச்சங்களுக்காக
இன்னொரு பூலோக நரக உலகம்
குப்பை தொட்டியருகே காத்திருக்கிறது

உண்ணும் போது கரம் உயர்த்தி
காக்கையை விரட்டிட வீசிய கையில்
விட்டகன்ற சோத்து பருக்கைகளை
கண்ட காக்கை ஒன்று கரைத்து கூவி
சேர்ந்து கூடி கூட்டமாய் உண்டது
ஆறறிவு உள்ள ஆணவ மனிதனிடம்
இல்லாத சிற் அறிவை காக்கையிடம்
மனிதம் பேசும் நாம் கறக்கவேண்டும்...!!!

யார் கடவுள்??



கடவுளின் உடைமைகள் 

களவாடபடாமலிருக்க 
கோவில்களில் காவலுக்கு 
காவலர்களும் மேலும் 
கதவுகளும் மூட படுகின்றன 
என் உடமைகளை கடவுள் காக்க 
என் உழைப்பில் கடவுளுக்கும்
பூசாரிக்கும் காணிக்கைகள்
கொடுப்பவன் கடவுளா
அவன் பெயர் சொல்லி எடுப்பவன் கடவுளா
புரியவில்லை எனக்கு
கடவுள் என்றால் என்னவென்று!!!



வாசலில் ஒரு வேளை உணவுக்காக
பலபேர் பசியோடு காத்திருக்க
கை கூப்பி கேட்டும் கொடுக்காமல்
கேட்காத பசியற்ற கடவுளர்க்கு
உள்வந்து அள்ளி அள்ளி கொடுப்போம்
நாங்கள் பக்திவான் என்ற பெருமையோடு!!!

பால் தேன் படையல் என்று பல
உண்ணாத கடவுளர்க்கு நித்தமும்
வேளை தவறாமல் கொடுபோமே அன்றி
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டிடோம்!!!

பட்டினி விதி என்று நான் படைத்திட
பசி உணராது புசிக்க கொடுத்தது யாரென்று
படைத்தவன் கோவம் போசிக்கிடுமென்று
பக்குவமாய் காரணம் சொல்லி ஆறறிவால்
பாரினிலே தப்பித்தும் கொள்வோம் !!!

-புலோலியூர் கரன்-
http://www.facebook.com/sabaharans