சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....
சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-
நாகரீகம் இங்கே கூட கூட உடைகள் அங்கே குறைகின்றன புதிய உடையை கிழித்து அணியும் புதுமை புரட்சியும் நடக்கிறதங்கே இன்றைய கண்ணகிகள் போதைக்காக கற்பிழக்கும் கண்ணன் அழகிகளிவர்கள் கலியுக கர்ணன்களை உருவாக்கும்
செல்வந்த சுகபோக வாரிசிவர்கள்
சூரியன் மேல் பழி போடாத குந்திகள்
சுகம் தேடி அலையும் இந்திரலோகமிது
மாற்ற உடையின்றி ஒருசமூகமிங்கே
மழைக்கு ஒதுங்க இடமின்றி நனையுது
கிழிந்த உடையை தைத்து தைத்து உடுத்தி
கற்பு காக்கும் இவர்கள் தீண்டத்தகாதவரிங்கே
சுருங்கிய வயிற்றை தண்ணீர் விட்டு நிரப்பும்
சுந்தர மதன காம சுகபோகத்தவர் எச்சங்களிவர்கள்
ஒவ்வொரு நிமிடத்தையும் நரக யுகமாக கடக்கும்
கடவுள் குழந்தைகள் இவர்களும் மனிதர்கள்தான்!!!
என் கஷ்டத்தை தீர்க்க கோவில் நோக்கிய பயணத்தில் பூசாரியின் அர்சனை சீட்டுக்கள் பிச்சைகாரர்களில் தட்டுக்கள் கடவுளின் உண்டியல்கள் என்னை நோக்கியே இருக்கின்றனநான் கடவுளை வணங்கமுன்
என்னை வணங்க வாசலில் சிலர்!!!
-புலோலியூர் கரன்-என் பக்கத்தில் இணைய....http://www.facebook.com/sabaharans
எட்டா உயரத்தில் வியாபாரக்கல்வி ஏறி நின்றால் ஏழையின் வாழ்வு இப்படி வீதியில் நசுங்கி நிக்கும் ....!!!
பணம் படைத்த பகவான்களுக்காக பட்டணத்திற்கு பாரிரங்கிவந்த இந்திரலோக சுந்தர விடுதிகளில் கலியுக கிருஷ்ண காமலீலைகள் கற்புக்கு பணம் என கணக்கு போடும் போதைக்காக பாதை மாறும் இலகணமில்லா இல்லறமிது
இவர்கள் சொல்வதே வேதம்
இதுதான் இன்றைய மார்க்கம்
நாளைய பெரியமனிதர்கள்
உருவாகும் உன்னத பூமியிது
பட்டாடை தினமும் பலவுடுத்தி
பல கோடி நவரத்தின நகை போட்டு
பாரினை காத்திடும் கரும் கற்களுக்கு
நாளும் நடத்திடும் அபிஷேகத்தில்
வெளிசிந்தும் கழிவை கரம் சேர்த்து
காத்திருந்து பருமும் ஏழையை போல
பகட்டு இரவு விடுதி மன்மதர்களின்
மிஞ்சிய நாகரிக எச்சங்களுக்காக
இன்னொரு பூலோக நரக உலகம்
குப்பை தொட்டியருகே காத்திருக்கிறது
உண்ணும் போது கரம் உயர்த்தி
காக்கையை விரட்டிட வீசிய கையில்
விட்டகன்ற சோத்து பருக்கைகளை
கண்ட காக்கை ஒன்று கரைத்து கூவி
சேர்ந்து கூடி கூட்டமாய் உண்டது
ஆறறிவு உள்ள ஆணவ மனிதனிடம்
இல்லாத சிற் அறிவை காக்கையிடம்
மனிதம் பேசும் நாம் கறக்கவேண்டும்...!!!
கடவுளின் உடைமைகள் களவாடபடாமலிருக்க கோவில்களில் காவலுக்கு காவலர்களும் மேலும் கதவுகளும் மூட படுகின்றன என் உடமைகளை கடவுள் காக்க என் உழைப்பில் கடவுளுக்கும்
பூசாரிக்கும் காணிக்கைகள்
கொடுப்பவன் கடவுளா
அவன் பெயர் சொல்லி எடுப்பவன் கடவுளா
புரியவில்லை எனக்கு
கடவுள் என்றால் என்னவென்று!!!
வாசலில் ஒரு வேளை உணவுக்காக
பலபேர் பசியோடு காத்திருக்க
கை கூப்பி கேட்டும் கொடுக்காமல்
கேட்காத பசியற்ற கடவுளர்க்கு
உள்வந்து அள்ளி அள்ளி கொடுப்போம்
நாங்கள் பக்திவான் என்ற பெருமையோடு!!!
பால் தேன் படையல் என்று பல
உண்ணாத கடவுளர்க்கு நித்தமும்
வேளை தவறாமல் கொடுபோமே அன்றி
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டிடோம்!!!
பட்டினி விதி என்று நான் படைத்திட
பசி உணராது புசிக்க கொடுத்தது யாரென்று
படைத்தவன் கோவம் போசிக்கிடுமென்று
பக்குவமாய் காரணம் சொல்லி ஆறறிவால்
பாரினிலே தப்பித்தும் கொள்வோம் !!!
-புலோலியூர் கரன்-
http://www.facebook.com/sabaharans