சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....
சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-
கர்ப்பகிரகத்தில் கடவுளை கண்டர் யார் கண்டதில்லை இதுவரை நான் கர்ப்பபையில் எம்மை சுமந்த கடவுள் உன்னை இல்லையென்று கதைத்தவர் யார் எவருமில்லை
உன் கருவறைதான் எமக்கு
உலகினில் முதல் உறை
உயிர் கொடுத்து உருவளர்த்த
உயிருள்ள உண்மை கடவுள் நீ
உயிர் கொடுத்த உன்னை
உருக்குலைய விட்டுவிட்ட
உறவின்றி தவிக்க வைத்து
உலக இன்பத்தில் உருள
உன் பிள்ளை சென்றுவிட்டான்
கருவறையை முதலறையாக்கி
உயிர் கொடுத்தாய்
இறுதியில் இப்படி ஓர் அறையில்
தனியாக தவிக்கவிட்டு
உன் உயிரை எடுக்கத்தானா?!!!
-புலோலியூர் கரன்-
வீசும் தென்றல் காற்று கிச்சு கிச்சு மூட்ட கூச்சம் தாங்காமல் தென்னம் கீற்றுக்கள் நளினம் காட்டி நெளிய பூவரசம் மரங்கள்
பீபீ செய்ய தூண்டி
இலைகள் காட்டி நிக்க
குளிக்க வந்த புற்கள் சில
விட்டு போக மனமின்றி
ஊறி கிடக்க
தண்ணீரில் தன் அழகை
எட்டி பார்த்து ரசிக்கும்
வளைந்த மரங்கள்
என் ரசனையை தட்டி
எழுப்ப
இத்தனை அழகினை
மொத்தமாக பார்த்திராத
என்
மயங்கிய மனமோ
கொட்டி கிடக்கும் தமிழை
ஒட்டி பார்க்க தூண்ட
எத்தனை வித மரங்கள்
இத்தனை ஒற்றுமையாய்
ஏதோ ஒன்றை சொல்லி போக
இரு பக்கமும் சமமாக
போடும் துடுப்பில் நகரும்
படகின் தத்துவத்தையும்
புரிந்தவனாக நகர்கிறேன்
ரசிகனாக நான் படகினில் ...
மழைமேகம் நிலவதன்மேல் தவழ்ந்து விளையாடுவதுபோல் உன் நிலா முகத்தில் கார்குழல் வீழ்கிறதே உன் தங்க நிற அங்கத்தில் ஒட்டிய வைர மூக்குத்தியும் மங்கித்தான் போகிறது
உன் முகத்தின் அழகு கண்டு
வானவில்லும் வயிறெரிந்து
கருகித்தான் போனதுவே
கருகிய வானவில்லும்
உன் புருவம் ஆனதெப்போ
காந்தம் கொண்டு செய்த
கருநிலா இரு விழியும்
காளையர் மனங்களை
கவர்வதில் மாயமில்லை
உதட்டோரம் குவியும்
உன் புன்சிரிப்பில்
சிதறாமல் ஓரிதயம்
இருந்துவிட்டால் அது
இப்பாரினிலே அதிசயமே
தூக்கிய கையின்
பாவங்கள் கண்டேன்
பாரினை ஏனோ
மறந்தே போனேன்
உடை திமிரும்
உன் பருவங்களால்
எண்ணங்களும்
உருக்குலைந்து
கற்பனையில் பரவசமும்
காட்சிகளில் வந்ததுவே
குளத்தினில் மிதக்கிறது
பல வண்ண தாமரைகள்
என் மன கிணற்றில்
அலைகிறது
உன் இடையின்
நளினங்கள்
பிரம்மனே
இத்தனை அழகையும்
மொத்தமாய் ஓரிடத்தில்
குத்தகை கொடுத்தது
எப்படி நியாயம் !!!
கிளையோடு விளையாடி இலையோடு உறவாடி கனியோடு பசியாறி மனதோடு இதமாகி கணணியோடு காட்சியாகி இணையத்தில் கவியாகிவிட்டாய் ...!