சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....
சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-
5:20 AM
ஒளி நோக்கி உயர்ந்திடும் மரமே உன் வளைவுகள்உரைக்கிறது உணவுக்கான உன் உழைப்பை உன்னை பார்த்தேனும் நான் உணரவில்லையே உழைத்து உயர்ந்திடும் உண்மையை
பட்டு கெட்டு அறிந்தபின்
பார்த்து வியக்கிறேன்
இயற்கையிடம் கற்க
மறந்ததை!!!
-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans
இதய நதியினிலே உதித்த சில இனிய செங்கமலங்களைகற்பனையில் வடித்ததுண்டு பதின்ம பருவ மயக்கங்களில் படிதாண்டி ரசித்ததுமுண்டு ஆயிரம் வண்ண இதழ் மலர்கள் உன்னருகில் வலை விரித்தபோதும்
உன் இதழசைவில் என் உயிர் துடிக்கிறது
உன்னால்தான் இன்னும் உலகம் இனிக்கிறது
-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans
தங்க வாழை தண்டெடுத்து பிரம்மன் வடித்த மெய்யோ!பூக்களெல்லாம் நாணமுற தரணி வந்த செம்மலரோ!இழை உருக்கு ஒளிதெறிக்க உடையணிந்து உற்றவரை உருக்குலைக்க உதித்தவளோ!
மனிதரெலாம் செழிப்புற
பாரெங்கும் ஓடிவந்து சங்கமிக்க
நதிகளுக்கு இவள் கடலோ!
மரங்களெல்லாம் பசுமைகொள்ள
இவள் இளமைதான் இன்ப வூற்றோ!
காளையர் மனதில் பருவமெழுதிட
கற்பனையில் வடித்து வைக்கும்
பதின்ம கனவுக் காதலியோ!
பாமரன் நானும் கவி எழுதிட
என் கண்கவர வந்த கவிக்கருவோ!!!
-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans
வெள்ளி மலர் சிந்திடும்
நிலவொளித் தேனினிலே
பொண் ஒளி படரவிடும்
பொழிந்த பருவங்கொண்ட
பரவச மெய்யுடையாள்
தேன்சுவைத்த வேளைகளில்
தென்னவன் ஸ்பரிசங்களை
செவ்வாய் உமிழ் சுரக்க
செறிந்திடும் நதியினிலே நாணம்
விரல்கொண்டு ஸ்வரங்கள் மீட்ட
கள்ளிடையாள் கரம் பிடிக்க
உதயன் உதிப்பதற்குள்
திடந்தோளான் வரவுக்காய்
ஏக்கமுற லயித்திருந்தாள் !!!
-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans