கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

திணறித்தான் போகிறேன் நானே

நுதல் நக்கும் கார் குழலே - உனை அவள் கோதும் வார் விரல் அழகே இதைக் கண்டவர் எழுதுவர் கவியே மதி வதனம் பூத்த செவ்விதழே - உன் தேன்சுளை சுவைத்திட நா ஊறுதே நாளும் நீ இசைந்திட மனம் ஏங்குதேகதை பேசும் மின் கயல் விழியே - உனைதினம் கண்டும் தித்திப்பு புதிதேதிணறித்தான் போகிறேன் அதில் நானேமெய் காய்த்துத் திமிரும் பருவக் கனியே – உனைகண்டதும் விழுங்கிட உமிழ் சுரக்குதேவிரல்களும் தவழ்ந்திடத் துடிக்குதேகனி தாங்கி விழுந்திடும் கொடியினை போலே...