கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

தாய் மொழி அம்மா!

அம்மா! ஆயிரம் ஆண்டுகள் பல கடந்த மொழியாம் தரணியில் இதுதான் முதல் மொழியாம் அன்னையே உன் அன்பை சொல்ல தமிழில் வார்த்தை இல்லையே ஏமாற்றியது செம்மொழி! தாயே ​​உன் பாசத்தால் மொழியையும் வென்றாய் அதனால் தான் தாய் மொழி என்றோம்! -புலோலியூர் கரன்- http://www.facebook.com/sabahara...

அமுதசுரபி இறுதி முத்தம்

கார்மேக நதிக் குழல் நடுவே  கரம் புதைத்து அருகசைத்து செவ்வதனம் கயல்மூடி  இதழ் பதிக்க நாணியவள்  நாற்குணமும் பதைபதைக்க  கலமனைத்தும் சிலுசிலுர்க  காலமதன் கைகொடுக்ககுணமனைத்தும் மறைந்திடவேதையலவள் ஏங்கிநின்றால்பருவமதை உணர்ந்திடவேபக்குவமாய் அறிந்திடவேபலகால ஏக்கங்களைமெய்யிரண்டும் ஓருயிராககாமனவன் தடம் பதிக்கஅவன்கொடுத்த இறுதி முத்தம்அமுதசுரபி இனிமையல்லோ!!!-புலோலியூர் கரன்-http://www.facebook.com/sabahar...

உள்ளம் கேட்கிறது அந்த அழகிய நாட்களை

பட்டாம்பூச்சிகள் போல  மனம் பல வண்ணங்களில்  எங்கெங்கோ பறந்து திரிந்தது  எந்த சுமையுமில்லை  அறியும் பக்குவமுமில்லைசுகந்திரகாலமதுவெயிலுக்கு பயந்ததுமில்லைமழைக்கு ஒதுங்கியதுமில்லைஇயற்கையோடு சங்கமித்தசந்தோஷ காலமதுஇலந்தை,விளா முட்கள்குத்தி வலித்ததுமிலைமா, புளி புளித்ததுமில்லைஒரு மரத்தையும் விட்டதில்லைஎந்த சத்து குறையுமில்லைஆரோக்கியகாலமதுவிளையாடாத விளையாட்டுமில்லைவிழுந்தெழும்பாத இடங்களுமில்லைவியர்க்காத நாட்களே இல்லைசோர்த்து திரிந்ததுமில்லைதுடிப்பான...